My Twitter Favorites


பயணங்கள் எப்பொழுதுமே மனிதனை மேம்படுத்துகின்றன ; அவனை உளவியல் ரீதியாக மாற்றுகின்றன...

Friday, July 15, 2016

எனக்கொரு சிநேகிதி


Print Friendly and PDF

எனக்கொரு சிநேகிதி சிநேகிதி தென்றல்
மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும்
பைங்கிளி
உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை
பார்த்துக் கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர்
சொல்லி பார்க்கிறேன்
மேகமது சேராது வான்மழையும் வாராது
தனிமையில் தவித்தேனே உன்னை எண்ணி
இளைத்தேனே
மேலிமையும் வாராது கீழிமையும் சேராது
உனக்கிது புரியாதா இலக்கணம் தெரியாதா
சம்மதங்கள் உள்ளபோதும் வார்த்தை ஒன்று
சொல்லவேண்டும்
வார்த்தை வந்து சேரும் போது நாணம்
என்னை கட்டிபோடும்
மௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள்
பேசி விடுமே
கைவளையல் குலுங்காமல் கால் கொலுசு
சிணுங்காமல்
அணைப்பது சுகமாகும் அது ஒரு
தவமாகும்
மோகம் ஒரு பூப்போல தீண்டியதும்
தீப்போல
கனவுகள் ஒரு கோடி நீ கொடு என் தோழி
உன்னை தந்து என்னை நீயும் வாங்கி
கொண்டு நாட்களாச்சு
உன்னை தொட்ட பின்பு தானே முட்கள் கூட
பூக்கள் ஆச்சு
விரல்கள் கொண்டு நீயும் மீட்டினால்
விறகும் வீணையாகும