My Twitter Favorites


பயணங்கள் எப்பொழுதுமே மனிதனை மேம்படுத்துகின்றன ; அவனை உளவியல் ரீதியாக மாற்றுகின்றன...

Sunday, September 28, 2014

ஆவிகள் உலகம் - 2

ஓர் ஆராய்ச்சியாளரின் அனுபவம் .......

ஆவிகளின் அறிமுகம் கிடைத்த ஆரம்ப நிலையில் இருப்பவர்க்குப் பொதுவாக ஆவிகளைப் பற்றி சிறிதளவேணும் அறிந்திருப்பவர்களுக்கு ஒரு கேள்வி எழும்புவது உண்டு. மரணத்திற்குப் பின்னால் மேலுலக வாழ்க்கையை அனுபவிக்கும் ஆவிகள் அடிக்கடி பூமிக்கு வருவது ஏன்? அது எப்படி நிகழ்கிறது? அப்படி பூமிக்கு வரும் ஆவிகள் இங்கே எந்த எந்த இடங்களில் அதிகமாக வசிக்கும் என்று.
அவ்வப்போது ஆவிகள் தங்களது பூர்வ கால வசிப்பிடங்களுக்கு வந்து சென்றாலும் நிரந்தரமாக அவைகள் பூமியில் தங்குவது இல்லை. தங்கவும் முடியாது. கருடபுராணத்தின் மிகப் பழைய பிரதி ஒன்றில் ஆவிகள் ஒரு மாதத்தில் 240 நாழிகை மட்டுமே பூமியில் நடமாட முடியும் என்று கூறப்படுகிறது. தற்காலத்தில் ஆவிகள் மனித உடலில் எவ்வளவு நேரம் தங்க முடியும் என்ற ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டபோது 15 நிமிடங்கள் மட்டுமே ஆவியால் மனித உடலை ஆக்கிரமிக்க முடியும் என்பது தெரியவந்து உள்ளது. இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது ஆவிகள் பூமியில் நிரந்தரமாகத் தங்க இயலாது என்பதும் அதே நேரம் பூமிக்கும் தங்களது சொந்த உலகிற்கும் அலைந்து கொண்டு இருக்க மட்டும்தான் முடியும் என்பது தெளிவாகிறது.

மேலும் பூமிக்கு வரும் ஆவிகள் தாங்கள் வாழ்ந்தபோது எந்த இடத்தில் விரும்பி வசித்தனரோ அந்த இடங்களுக்குத்தான் வந்து செல்ல விரும்புகிறது. உயிர் பிரிந்த இடத்தில்தான் ஆவிகள் நடமாடும் என்பது தவறான நம்பிக்கையாகும். காரணம் மிகத் தெளிவானதாகும். அயல் நாட்டில் ஒருவன் உயிர் பிரிகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படிப் பிரிந்த உயிர் உடனடியாக தன்னால் நேசிக்கப்பட்ட குடும்பத்தினர் இருக்கும் இடத்திற்கு வந்து ஏதோ ஒரு நிமித்தம் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் அறிகுறி மூலமாகவோ தனது இறப்பை குடும்பத்தினருக்கும் தெரியப்படுத்துகிறது. அப்படி தெரியப்படுத்தப்பட்ட அனுபவங்கள் பல உள்ளன.

எனது நண்பர் ஒருவர் அரசு வேலை கிடைத்தால் தஞ்சாவூர்க்கு சென்று பணி புரிய வேண்டியதாயிற்று. அவர் எங்களிடத்தில் இருந்தபோது நானும் முருகவேல் என்ற வேறு ஒருவரும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். அவர் தஞ்சாவூர்க்குப் பிரிந்து சென்றதிலிருந்து மனதிற்குள் இளம்புரியாத சோகம் மூன்று பேருக்குமே உண்டு. இதை நானும் நண்பர் முருகவேலும் அடிக்கடி பேசி ஆற்றிக்கொள்வோம்.

திடீரென்று ஒரு நாள் காலை தஞ்சாவூலுருக்கும் நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. முருகவேல் எப்படி இருக்கிறான் என்று என்னிடம கேட்டார். நன்றாகத்தானே இருக்கிறார். நேற்று இரவு கூட வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தோம். ஏன் திடீரென்று அவரைப் பற்றிக் கேட்கிறாய் என்று நான் கேட்டேன்.

ஒன்றுமில்லை…. இப்போது 10 நிமிடத்திற்கு முன்பு முருகவேல் என் அலுவலக வாசலில் நின்றதைப் பார்த்தேன். ஒருவேளை அவன் தஞ்சாவூர் வந்திருக்கிறானோ என்று தெரிந்து கொள்ளவே போன் செய்தேன். இருந்தாலும் மனது ஏதோபோல் இருக்கிறது. சரி பரவாயில்லை என்றார்.

நானும் முருகவேல் அரகண்ட நல்லூரில்தான் இருக்கிறார். அவரைப் போன்று வேறு யாரையாவது பார்த்திருப்பாய் எனக்கூறி தொலைபேசியை வைத்து விட்டேன். வைத்த 10வது நிமிடம் ஒரு ஆள் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க என்னிடம் விரைவாக வந்தார். உங்களுக்கு விஷயம் தெரியுமா என்றார்.

அவர் குரலில் படபடப்பும் தடுமாற்றமும் இருந்தது. அவர் முகபாவம் அவரின் விழிகள் அலைந்த விதம் இவர் ஏதோ அதிர்ச்சியான விஷயத்தைச் சொல்லப் போகிறார் என்பதை எனக்குத் தெளிவாக காட்டியது. ஏன் என்ன விஷயம் நிதானமாகச் சொல்லுங்கள் எதற்காகப் பதட்டப்படுகிறீர்கள் என்று அவரை ஆசுவாசப்படுத்தினேன். அவர் தான் அமைதி பெறாமலே அடுத்த அதிர்ச்சியை எடுத்து வைத்தார். உங்கள் நண்பர் முருகவேல் அரைமணி நேரத்திற்கு முன் செத்து விட்டார் என்றார்.

அதிர்ச்சியில் ஒரு நிமிடம் ஆடிப்போய் விட்டேன். சற்று நேரத்தில் நிதானமான பிறகு தஞ்சை நண்பர் முருகவேலை அலுவலக வாசலில் பார்த்ததாகக் கூறியதை நினைத்தப் பார்த்தேன். தனது மரணம் ஏற்பட்டவுடன் தன் உயிர் நண்பர்க்குத் தன்னை வெளிப்படுத்திய முருகவேலின் நெஞ்சார்ந்த நட்பு என்னைக் கலங்கவைத்தது.

இதே போன்று நிறைய சம்பவங்கள் எனக்கு மட்டுமல்ல உங்களில் பலருக்கும் ஏற்பட்டு இருக்கும். ஆவிகள் தான் நேசித்த இடத்திற்கு வந்து செல்வதையும் தான் நேசித்த நபர்கள் வாழும் இடத்திற்குச் செல்வதை இப்படி பல நூறு அனுபவங்களில் நிருபிக்கலாம்.
மக்களிடத்தில் ஆவிகளைப் பற்றி வேறு ஒரு அபிப்ராயம் உள்ளது. ஆவிகள் பாழடைந்த மண்டபங்களிலும் மயானங்களிலும் அதிகமாக வாழுகின்றன என்று. இதில பாழ்மண்டபங்களில் ஆவிகள் வசிப்பது அவ்வளவு தூரம் உண்மையானது அல்ல. அந்த மண்டபங்களின் தோற்றம் பயமுறுத்துவதாக இருப்பதனால் பெருவாரியான ஜனங்கள் ஆவிகளோடு அவைகளைச் சம்பந்தப்படுத்தி பேசுகிறார்கள்.

ஆனால் சில மண்டபங்களில் ஆவிகள் வசிப்பது உண்டு. அந்த மண்டபங்கள் வாழ்ந்த போது அந்த ஆவிக்குப் பிடித்தமான இடமாகவோ அல்லது ஏதோ ஒரு வகையில் சம்பந்கப்பட்ட இடமாகவோ இருக்கலாம். பொதுவாக அப்படிப்பட்ட மண்டபங்களில் வசிக்கும் ஆவிகள் அமைதி அடையாமல் ஏதோ ஒரு வகையான ஆக்ரோஷத்துடன் அந்த மண்டபங்களில் இருக்கலாம்.

ஆனால் மரங்களில் ஆவிகள் வசிப்பது உண்மையானதுதான். முருங்கை மரம், கருங்காலி மரம், அசோகமரம் போன்ற மரங்களிலிருந்து வெளிவரும் கரியமிலவாயுவின் தன்மை ஆவிகளின் காற்று உடம்பை பிடித்துவைத்துக் கொள்ள ஏதுவாக இருப்பதனால் இத்தகைய மரங்களில் ஆவிகள் வசிப்பது அவைகளுக்கு மிக சௌகரியமாக இருக்கும்.

மேலும் பெருவாரியான ஆவிகள் மயானங்களில் வாழ்வதை விரும்புகின்றன. புதியதாக வரும் ஆவிகளை வரவேற்பதற்கும் துன்புறுத்துவதற்கும் இறந்து போனவர்களுக்குத் தவறுதலாகப் படைக்கப்படும் பிண்டங்களை எடுத்துக்கொள்ளவும் புதைக்கப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட தனது உடல் மீண்டும் கிடைக்காதா என்பதற்காகவும் இன்னும் வேறு சில மாந்திரீகர்களால் கட்டப்பட்டும் ஆவிகள் மயானத்தில் நிறைந்திருப்பது இயற்கை ஆகும்.

இது தவிர பழங்கால அரண்மனைகள் போன்றவற்றில் தண்டனை பெற்ற ஆவிகள் மூர்க்கத்துடன் அலைவதையும் சாலை ஒரங்களில் விபத்துக்குள்ளான ஆவிகள் திருப்தி இல்லாமல் அலைவதையும் பழங்கால கிணற்று ஓரங்களில் தற்கொலை செய்து கொண்ட ஆவிகள் அமைதி இல்லாமல் அலைவதையும் வாஸ்து முறைப்படி கடடப்படாத வீடுகளில் சில ஆவிக் குழுக்கள் வாழ்வதையும் அனுபவத்தில் காணலாம்.

அடுத்ததாக ஆவிகளை எல்லோராலும் பார்க்க முடிவதில்லை ஏன்? அப்படிப் பார்த்ததாகக் கருதுபவர்களில் முக்கால வாசிபேரின் அனுபவங்களி சுய கற்பனையாகவும் மனப்பிரமையாகவும் இருக்கிறது அப்படி இருக்க உண்மையில் ஆவிகளைப் பார்க்க முடியாதா? ஆவிகள் நடமாடக் கூடிய சில இடங்ளில் நான்கு ஐந்து பேர் குழுக்களாகச் சென்றால் அதில் குறிப்பிட்ட ஒருவர்தான் ஆவிகள் தெரிவதாகக் கூறுகிறார்கள். அப்படிக் கூறுபவர்களின் மன இயல்புகளையும் உடற் கூறுகளையும் பகுத்துப்பார்க்கும் போது அவர்கள் ஏதாவது ஒரு ரீதியில் பலஹீனர்களாகவும் அடுத்தவர்களைப் பயமுருத்திப் பார்ப்பதில் இன்பம் கான்கிறவர்களாகவும் இருப்பதை அறிய முடிகிறது. இதனாலேயே ஆவிகளைப் பார்த்தாகக் கூறும் பல சம்பவங்களை நம்ப முடியாததாக ஆகிவிடுகிறது.

ஆவிகளைப் பார்க்கும் உண்மையான சந்தர்ப்பம் ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் அமைகிறது. அனாலும் அதில் உண்மை எவ்வளவு பொய் எவ்வளவு என்பதை அவர்கள் பேச்சிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். திருச்சியிலிருந்து சமீபத்தில் ஒரு இளைஞர் என்னிடம் வந்தார். அவர் நன்றாகப் படித்தவர். அயல் நாட்டில் வேலையும் செய்கிறார். தான் கல்லூப் படிப்பை மேற்கொண்ட போது மாணவர் விடுதியில் தங்கி இருந்ததாகவும் அப்போது தனது அறையினுள் திடீர் திடீர் என மல்லிகைப் பூ வாசம் வீசியதாகவும்அந்த நேரம் மெல்லியதாக வளையல் சத்தம் கேட்டதாகவும் தான் அதை அன்றைய சூழலில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் தொடர்ச்சியாக இதே போன்ற நிகழ்வுகள் தனது அறையில் சில மாதங்கள் நடந்ததாகவும் ஒருநாள் தான் வெகுநேரம் கழித்து அறைக்கு வந்து கதவைத் திறந்தபோது அறையின் உள்ளிருந்து வெண்மையான புகைவடிவில் ஒரு பெண் உருவம் விருட்டென்று வெளியேறியதாகவும் அப்படி வெளியேறும் போது காற்றுபோல் தன்னைத் தள்ளிவிட்டுச் சென்றதாகவும் அப்போது மிகவும் குளிர்ச்சியான சூழலைத் தான் உணர்ந்ததாகவும் கூறினார்.

அந்தச் சம்பவம் நடந்த பிறகு தனக்கு 2 நாட்கள் கடுமையான ஜுரம் இருந்தது என்றும் ஆயினும் தான் அந்தக் காற்றுப் பெண்ணைப் பற்றி எந்த விவரத்தையும் யாரிடமும் சொல்லவில்லை என்றும் நாளடைவில் தனக்கு உடல் பலஹீனமும் படிப்பில் தடுமாற்றமும் நண்பர்களிடத்தில் விரோதமும் ஏற்பட்டு விட்டதாகவும் கூறிய அவர்

கல்லூரிப் படிப்பை விருப்பம் இல்லாமலே ஏனோதனோ வென்று படித்து முடித்தேன். கல்லூரி வாழ்க்கை முடிந்த சில மாதங்களில் யாரோ என்னைத் தொடுவது போன்றும் யாருடனோ படுக்கையைப் பதிர்ந்து கொள்வது போலவும் சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தது. பெற்றவர்களிடம் சொன்னால் பயந்து விடுவார்கள் என்று மறைத்தே வைத்து இருந்தேன். அயல் நாட்டில் வேலை கிடைத்த பிறகும் அதே போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நீடித்தது.

அப்படி இருக்கையில் ஒரு நாள் நான் விடுதி அறையில் பார்த்த அதே பெண்ணை வேறு ஒரு வடிவத்தில் என் கண்ணெதிரே நேருக்கு நேராகப் பார்த்தேன். அப்பெண் என்னை அப்போதும் தொட முயற்சித்தாள். ஆனால் நான் கந்தசஷ்டி கவசத்தை சொல்ல ஆரம்பித்ததும் அவள் மறைந்து விட்டாள். அதன் பிறகு அடிக்கடி நான் அவளைப் பார்க்கிறேன். இதனால் வேலையில் தடுமாற்றமும் புத்தி தடுமாற்றமும் ஏற்படுவதை உணர்கிறேன் என்று பரிதாபமாகக் கூறினார்.

அவர் கூறிய இந்த சம்பவத்தைக் கேட்பவர்கள் யாராக இருந்தாலும் ஆவி வந்து இவரைத் தொடர்ச்சியாக துரத்தி வருகிறது என்றுதான் நம்புவார்கள். ஆனால் அவர் என்னை சந்தித்த அந்த நேரத்தில் அவர் உடம்பில் ஆவிகள் தொல்லை செய்வதற்கான வாய்ப்புகள் ஏதும் அற்ற அறிகுறிகளே தென்பட்டது. அவரது பேச்சைப் பகுத்து ஆராய்ந்தபோது அவர் மணதிற்குள் உள்ளவற்றை நுணுக்கமாக ஆராய்ந்தபோது ஓர் உண்மை தெரிந்தது அவர் விடுதி அறையில் சந்தித்த ஆவி சம்பவம் நிஜமானதுதான்.

ஆனால் அந்த ஆவி அவரைத் தொடர்ந்து துரத்தி துன்புறுத்தவில்லை. அதன் பின்னர் அவருக்கு ஏற்பட்ட நிகழ்வுகள் எல்லாம் அவரை அறியாமலே அவர் மனது கற்பித்துக் கொண்ட பிரம்மையான தோற்றங்களே ஆகும். முதன் முதலில் ஆவியைப் பார்த்ததன் விளைவு அவருக்குள் ஆழமான பயத்தை ஏற்படுத்தி இருந்ததனாலும் இயற்கையாகவே பாலூணர்வு பற்றிய வேட்கை அவருக்குள் புதைந்து கிடந்ததனாலும் இந்த மாதிரியான சம்பத்தைக் கற்பித்து மனது செயல்பட்டு இருக்கிறது.

ஆவிகளைப் பார்ப்பது பற்றி இப்படித்தான் பல சம்பவங்கள் உண்மையோடு கற்பனை கற்பிதங்களும் கலந்து நடமாடுவதால் எது உண்மை எது பொய் என அறிவது மிகவும் சிரமமான காரியமாக இருக்கிறது. சில கிராமவாசிகள் தாங்கள் இரவில் கழனிக்குச் செல்கிறபோது ஆள் உயரத்திற்கு நெருப்புக் கம்பம் ஒன்று நடந்து சென்றதாகவும் அதைத் தாங்கள் இரண்டு கண்களாலும் சத்தியமாகப் பார்த்ததாகக் கூறுவார்கள். அவர்கள் அப்படிக் கூறுவதும் பொய் அல்ல.அவர்கள் பார்த்த தோற்றமும் பொய்யானது அல்ல.

ஆனால் அது ஆவி அல்ல. பூமியிலிருந்து கிளம்பும் ஒருவித வாயு காற்றில் கலப்பதனால் தானாகப் பற்றி எரிந்து காற்றில் நகருவதையே இப்படிக் கூறுகிறார்கள். இதை நெருக்கமான நகரங்களில் காண இயலாது. பரந்து விரிந்த கரிசல் மண் வண்டல்மண் போன்ற மணற்பரப்புகளிலேயே இத்தகைய காட்சிகளைக் காணலாம்

ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆவிகள் மனிதர்களின் அருகாமையை விரும்புவது அதிகம் உண்டு. ஆனால் ஆவிகள் மனிதர்களின் கண்களுக்குள் அகப்படுவதைப் பொதுவாக விரும்புவது கிடையாது. தான் விரும்பினால் மட்டுமே மனிதர்களுக்குத் தனது தோற்றத்தை சில நிமிடங்கள் காட்டும்.

மற்றபடி ஆவிகள் தங்களது இருப்பை சில ஒலிகள் மூலம் வாசனைகள் மூலமும் மனிதர்களுக்குக் குறிப்பிட்டுக் காட்டும். ஆனால் ஆவிகள் நாய்கள், பூனைகள், ஆடு மாடுகள் போன்ற விலங்குகளுக்குச் சர்வ சாதாரணமாகத் தெரியும். நமது நடமாட்டத்தை விலங்குகள் எப்படி அவதானிக்கிறதோ அது போன்றே ஆவிகளின் நடமாட்டத்தையும் துல்லியமாக அறிகிறது. இதற்கு உதாரணமாக யாருமே இல்லாத வெற்று திசையை நோக்கி நாய்கள் தொடர்ச்சியாகக் குரைப்பதையும் இல்லாத ஆளை துரத்திக் கொண்டு செல்வதையும் கூறலாம்.
ஆவிகள் இருக்கும் பகுதியை மனிதர்கள் வேறு எந்தவகையில் அறியலாம் என்றால் அந்தக் குறிப்பிட்ட பகுதிக்கு நாம் சென்ற உடன் தேவை இல்லாமல் உடல் புல்லரிக்கும். மன ஒட்டங்கள் தாறுமாறாக ஓடும். நமது கவனம் முழுமையாகச் சிதறும். அப்போது மனதைப் பிடித்து இழுத்து ஒரு மையப்புள்ளியில் நிறுத்தினால் இது சாத்யமாகும் நபர்க்கு ஆவிகள் வெண்படலமாகவோ கரும்படலமாகவோ தெரியும். மற்றபடி ஆவிகள் பார்க்க இயலாது.

பிரத்தியேகப் பயிற்சி எடுத்தவர்கள் வேண்டுமானால் தாங்கள் விரும்புகின்ற படி ஆவிகளை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் அழைத்துப் பார்க்கலாம், பேசலாம். அவைகளுக்குச் சில வேலைகள் தரலாம். அதன் மூலம் முடியாத பலவற்றை முடித்தும் காட்டலாம். ஆனால் அது மாந்தீரிகனாக இருப்பதற்கு உதவுமே அல்லாது நல்ல மனிதனாக இறைவனிடம் சேர்வதற்கு உதவாது.

ஆவிகளை அனைவராலும் பார்த்து விட முடியாது என்கின்றபோது அவைகளைச் சிலர் புகைப்படம் எடுத்து இருக்கிறார்களே அது எப்படி நிகழந்தது என்ற வினா எழும்புவது இயற்கை முதன் முதலில் ஆவிகளைப் படம் பிடிக்கும் வாய்ப்பைப் பெற்றவர் வில்லியம் மம்ளர் ஆவார். இவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்.

1868 ஆம் வருடத்தில் வேறு ஒரு காட்சியைப் புகைப்படம் எடுத்துக் கழுவி பார்த்தபோது சில வருடங்களுக்கு முன்பு இறந்து போன தனது உறவினர் ஒருவன் நிழல் உருவம் புகைப்படத்தில் படிந்து இருப்பதைப் பார்த்து வியந்து போனார். பின்னர் பல புகைப்பட நிபுணர்களிடம் அந்தப் படத்தைக் காட்டி இது எப்படி நிகழ்ந்து இருக்கும் என்று ஆராயச் சொன்னார்.

இந்த புகைப்படம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே காலகட்டத்தில் வேறு சில ஆவிகளின் புகைப்படமும் ஆராய்ச்சியாளர்கள் எடுத்த புகைப்படமும் எந்த வித சந்தேகத்திற்கும் இடமில்லாத உண்மையான புகைப்படம் என்ற முடிவிற்கு வந்தனர். அதன்பின் பல்வேறு நிஜ ஆவி புகைப்படங்கள் உலக ஆவி ஆர்வலர்களுக்கு இடையில் இன்று நடமாடுகிறது.

இந்தப் புகைப்படங்கள் அனைத்துமே திட்டமிட்டு காத்திருந்து எடுத்த புகைப்படங்கள் அல்ல. யதேச்சையாக கேமரா கண்களுக்குள் சரிவர அகப்படாத ஆவிகள் புகைப்படத்திற்குள் அகப்பட்டுக் கொள்வது ஒரு அதிசயம் ஆகும். அதற்கான காரணங்கள் இதுவரை புரிய படவில்லை.

ஆவிகள் உண்டு என்ற நம்பிக்கையை உலகிற்கு வழங்கிய நமது நாட்டில் ஏனோ இதுவரை ஆவிகளைப் படம் பிடிப்பதற்கான முயற்சிகள் நடைபெறவில்லை. வருங்காலத்தில் அதைச் செய்வதற்கு இறைவன் நமக்குத் துணை செய்வான் என்று நம்புகிறேன். மேலும் இங்கு ஒரு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். ஆவிகளின் புகைப்படம் என்று இன்று வெளிவரும் பெருவாரியான புகைப்படங்களில் மனிதர்களின் கைவண்ணத்தால் கருவிகளைக் கொண்டு செய்யும் மேஜிக் தோற்றங்கள் அதிகமாக இருக்கிறது. அவற்றில் உண்மையானதைத் தேர்ந்து எடுப்பதே மிகக் கடினப் பணியாக உள்ளது. அசலை விட போலியே அதிகமாக உள்ள துறைகளில் ஆவிகளின் புகைப்படத் துறையும் ஒன்றாக இருக்கிறது.

நான் சென்னை முகாமில் இருந்த போது ஆவிகளின் புகைப்படங்களை ஆராய விரும்பி இணையதளங்களில் இருந்து சில புகைப்படங்களைப் பிரதி எடுக்கச் சொன்னேன். எங்கள் இடத்தில் இருந்த கணிப்பொறி மூலம் பிரதி எடுக்கும் வேலை நடந்து கொண்டு இருந்த போது ஒரு குறிப்பிட்ட புகைப்படத்தினை நகல் எடுக்க முயற்சித்த போது திடீரென கணிப்பொறி செயல் இழந்தது.

அதே நேரம் வெளியில் தென்னை மரத்தில் இருந்த இளம் தேங்காய் ஒன்று பொத்தென அறுந்து வீழ்ந்தது. அறையினுள் குபீர் என வெப்பக் காற்று வீசியது. இவைகள் எல்லாம் தற்செயலான நிகழ்வுதான் எனக் கருதி மீண்டும் பணியைத் தொடர முயற்சித்தோம். அப்போதும் முன்பு போலவே அச்சரம்பிசகாமல் அந்தச் சம்பவம் நடந்தது. இப்படி மூன்று முறை முயற்சித்த போதும் அந்த படத்தை நகல் எடுக்க முடியாமல் ஒரே மாதிரியான தடங்கல் ஏற்பட்டது.

அதன் பின்னரே இது தற்செயலான நிகழ்வாக இராது. ஏதோ ஒரு அதீத சக்தி இத்தடங்கலைத் திட்டமிட்டே நடத்துகிறது என முடிவுக்கு வந்து எனது வழிகாட்டும் தேவதைகளை அழைத்துச் கேட்டோம். அவைகளிடமிருந்து வந்த பதில் எங்களைத் திடுக்கிடவைத்தது.

நீங்கள் நகல் எடுக்க விரும்பியது பூனை வடிவில் உள்ள ஒரு எகிப்திய ஆவி. அது 2000 வருடமாக பூனை வடிவிலேயே பூமியில் அவ்வப்போது நடமாடி வருகிறது. தற்செயலாக புகைப்படச் சுருளில் அந்த ஆவியை பதிவு செய்ய முடிந்து இருக்கிறது. அது தனது இருப்பை இந்த வகையில் உங்களுக்குக் காட்டி இருக்கிறது என்று தேவதைகள் கூறின.

அதன்பின்னர் ஒரு பிரார்த்தனை செய்துவிட்டு படத்தை நகல் எடுத்தேன். அந்தப் படத்தைப் பற்றிய சம்பவம் எங்களுக்கு வியப்பை தந்தாலும் ஒரு ஆவி 2000 வருடமாகப் பிறப்பு எடுக்காமல் இருக்க முடியுமா என்ற ஒரு வினா எங்களுக்குள் எழுந்தது. அதைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்க மனம் தூண்டியது.

மந்திரக் கலையிலும், அமானுஷ்யத் துறையிலும் அனுபவம் உள்ள சிலரிடம் இறந்த பிறகு ஆவிகள் சுமார் எத்தனைக் காலம் மேல் உலக வாசத்தை ஆத்மாக்கள் மேற்கொள்ளும் எனக்கேட்டேன். ஒவ்வொருவரின் பதிலும் வெவ்வேறு விதமாக இருந்ததே அல்லாது கேள்விகளுக்கான முழுமையான பதிலை யாராலும் தர இயலவில்லை. அவரவர் தங்களுக்குச் சரியெனப்பட்ட காலத்தைக் கூறினார்களே அல்லாது சரியான தீர்க்கமான பதிலைக் கூறவில்லை.

எனவே ஆவிகளிடமே இக்கேள்விகளுக்கான பதிலைப் பெற்று விடுவது என்று தீர்மானித்தோம். சோதனைக்காக இறந்து 75 வருடமன எங்களுக்குத் தெரிந்த ஒருவரின் தாத்தாவின் ஆவியைக் கூப்பிட்டு பார்த்தோம். அதற்கு ஆவி உலக வழிகாட்டிகள் தாங்கள் குறிப்பிட்டு அந்த ஆவி பூமியில் பிறந்து விட்டது. எனவே அதனோடு பேச இயலாது என்ற பதிலை தந்தது. 75 வருடத்திற்குள்ளேயே ஆவிகள் பிறப்பு எடுக்கும்போது 2000 வருடம் எப்படி ஒன்று ஆவியாகவே இருக்கும்?

இந்த வினா அப்போது உடனிருந்த பலருக்கு எழுந்தது. எனவே இறப்பெய்தி 22 வருடங்களான ஒரு பெண்ணின் ஆவியை அழைத்தோம். அந்த ஆவியிடம் எங்கள் கேள்வியை வைத்தோம். அதற்கு ஆவி தந்த பதிலை அப்படியே தருகிறேன். இங்கு கால நேரம் என்று எதுவும் கிடையாது. அல்லது எங்களுக்கு அது உணர்வுக்கு வராமல் மறைக்கப்பட்டிருக்கிறது என்று கருதுகிறேன் கராணம் நான் இறந்து 22 வருடங்கள் ஆவதை எனக்கு வைக்கப்படும் வருடாந்திர தர்ப்பணமே நினைவுபடுத்துகிறது.

ஆனால் எனக்கு இந்த 22 வருடங்களும் எதோ ஒன்றிரண்டு நாட்கள் போலவே தெரிகிறது. மேலும் பூமியில் வாழும் காலத்தில் நாங்கள் செய்த செயல்கள் எண்ணிய எண்ணங்கள் ஆகியவற்றிற்கு ஏற்பவே இங்கு எங்களின் நிலை அமைகிறது. நிறைய ஆவிகள் இங்கு வேதனையோடு அழுவதையும் ஆத்திரத்தோடு கூச்சலிடவதையும் சந்தோஷமாக ஆடிப்பாடித் திரிவதையும் பார்க்கிறேன். பூமியில் எப்படி ஒரவருக்கு ஒருவர் அறிமுகமாகி இருக்கிறோமோ அதே மாதிரி இங்கேயும் நாங்கள் சக ஆவிகளுடன் பரிச்சயம் செய்து கொள்வோம். திடீரென்று ஒரு ஆவி காணாமல் போய்விட்டால் அது பூமியில் பிறந்து விட்டது என்று நினைத்துக் கொள்வோம். அந்த பிரிவு எங்களுக்கு சந்தோஷத்தையோ துயரத்தையோ தருவதில்லை.

பானிபட் யுத்தத்தில் பலியான ஆவிகள் கூட இன்னும் இங்கே இருக்கின்றது. திடீரென்று வந்த சில பொழுதிலேயே கருவறை வாசத்தை மேற்கொள்ள அனுப்பப்பட்ட ஆவிகளும் இங்கு வந்து போய் உள்ளன. ஏன் சில ஆவிகள் பல காலம் இங்கே இருக்கின்றது. சில மட்டும் ஏன் உடனடியாகப் பிறப்பு எடுக்கச் சென்று விடுகின்றன என்பது எங்களுக்குத் தெரியாது. அவைகள் எல்லாம் இங்கு நடமாடும் சில தேவதைகளுக்கும் தூரத்தில் எட்ட முடியாத வெளிச்சமாக தெரியும் ஒரு மகாசக்திக்குமே அந்த ரகசியங்கள் தெரியும் என்று அந்த ஆவி கூறியது.

இதை வைத்துப் பார்க்கும் போது ஆவிகளின் ஆயுட் காலம் எந்தக் கணக்கிற்கும் அகப்படாத ஒரு புரியாத புதிராகவே இருக்கும் என்று தோன்றுகிறது. பாவ புண்ணியங்களின் அளவில் சொர்க்க நரகங்கள் தீர்மானிக்கப்பட்டால் அவைகளில் வாசம் புரியும் காலம் பிறப்புக் கடவுகளின் கையிலேயே இருப்பது புரிகிறது. யாருக்கு எப்போதும் பூமி வாசம் கொடுக்க வேண்டும் என்று அவன் கருதுகிறானோ அதுவரை ஆவிகள் ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆனாலும் கூட சூட்சம் தேகத்திலேயே வாழும்படி நேரிடுகிறது. அப்படி வாழ்வது தண்டனையா சன்மானமா என்பது நமக்குப் புரியவில்லை. அதைக் தெரிந்து கொள்ளும் ஆற்றலும் நமக்கு இல்லை ....


Tuesday, September 23, 2014

ஆவிகள் உலகம் - 1

ஆவிகள் பற்றிய ஆராய்ச்சியாளரின் கட்டுறையிலிருந்து....

ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர். இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்தவர். இவர் ஆங்கிலத்தில் Death and After என்ற ஒரு ஆய்வு நூலை எழுதியிருக்கிறார். அதில் ஆவிகள் பற்றி பல சுவாரஸ்யமான சம்பவங்களைத் தெரிவித்திருக்கிறார்.

கிருஷ்ணய்யரின் மனைவி பெயர் சாரதா. அவர் இருதயக் கோளாறால் இறந்து விட்டார். இது கிருஷ்ண அய்யருக்கு மிகுந்த சோகத்தைத் தந்தது. 33 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இணை தன்னை விட்டுப் பிரிந்ததைப் பற்றி மிகவும் கவலை கொண்டார். மரணம் என்றால் என்ன, அதன் பின் மனிதர்களின் நிலை என்னவாகிறது என்பது பற்றியெல்லாம் ஆராய்ந்தார். ஆவிகளுடன் பேசும் முறைகள் பற்றியும் ஆய்வுகள் செய்தார். உலகெங்கும் பயணம் செய்து பல புகழ்பெற்ற மீடியம்களை சந்தித்தார். பல அதிசய அனுபவங்களை, தகவல்களைப் பெற்றார் என்றாலும் நேரடியாக அவரால் அவரது மனைவியின் ஆவியுடன் தொடர்பு கொள்ள இயலாமல் இருந்தது.

அவர் மனைவி சாரதாவின் ஆவி பிறர் கண்களுக்குத் தட்டுப்பட்டது. அவர்களோடு பேசியது. பல எதிர்கால தகவல்களைக் கூறி எச்சரிக்கை செய்தது. ஆனால் கிருஷ்ணய்யருக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணத்தை சாரதாவின் ஆவியிடம் ஒரு நண்பர் வினவிய போது, ‘அவர் என் பிரிவால் அடைந்திருக்கும் சோகமும், அதனால் ஏற்படும் துயரமுமே மிகப் பெரிய திரையாகச் சூழ்ந்து அவரை என்னோடு தொடர்பு கொள்ள இயலாமல் செய்திருக்கிறது. அதை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியாக வாழ முயல வேண்டும்’ என்று அறிவுறுத்தியது.

இதனை அறிந்த கிருஷ்ணய்யர் மிகவும் துயரம் கொண்டார். ஒருநாள் கிருஷ்ணய்யரின் இல்லத்திற்கு ஒரு சாது வந்தார். அவர் புராணம் பிரசங்கம் செய்வதில் வல்லவர். மட்டுமல்ல’ ஆவிகளுடன் பேசுவதிலும் பயிற்சி பெற்றவர். அவர் கிருஷ்ணய்யருக்கு ஆவிகளுடன் பேசுவதற்காக சில பயிற்சி முறைகளை சொல்லித் தந்தார். ஆனால் அய்யர் அப்போது உச்ச நீதிமன்றத்தில் அமர்வு நீதிபதியாகப் பணியாற்றி வந்ததால் மிகுந்த வேலைப்பளு இருந்தது. அதனால் அந்தப் பயிற்சிகளைச் செய்ய இயலவில்லை. இனி கிருஷ்ணய்யர் கூற்றாகவே வருவதைக் காண்போம்.
அந்தச் சாது என்னோடு சிலநாட்கள் தங்கினார். என்னை தனது சிஷ்யப் பொறுப்பிலிருந்து விடுவித்தார். ஒருநாள்… பௌர்ணமி… இரவு… அன்று அவர் தியானத்தில் அமர்ந்தார். பின் தான் தற்போது சாரதாவின் ஆவியுடன் தொடர்பு கொள்ளப் போவதாகத் தெரிவித்தார். நானும் அதற்குச் சம்மதித்தேன்.

மறுநாள் காலை எழுந்ததும் அந்தச் சாது என்னைச் சந்தித்தார். தனது தியானத்தில் என் மனைவியைக் கண்டதாகவும் (அவர் முன்னமேயே என் மனைவியின் புகைப்படத்தைப் பார்த்திருந்தார்), அவர் பத்மா, காந்தா என்னும் இரண்டு பெயர்களை மட்டும் கூறி விட்டு உடனடியாக மறைந்து விட்டதாகவும் சொன்னார். நான் அதிர்ச்சியுற்றேன். காரணம், இந்த முன்பின் தெரியாத சாதுவால் அந்தப் பெயர்களை கற்பனை செய்து கூடச் சொல்லியிருக்க முடியாது. ஏனென்றால் பத்மா என்பது மனைவியின் சகோதரி பெயர். காந்தா என்பது என் மனைவியின் சகோதரர் பெயர் (காந்தா என்றுதான் அவரை அனைவரும் அழைப்பார்கள்). ஆக, இவர் என் மனைவியைக் கண்டதாகச் சொல்வது உண்மைதான் என உணர்ந்தேன்.

சில நாட்கள் போயிற்று. மீண்டும் அவர் ஒரு நாள் தியானத்தில் அமர்ந்தார். மறுநாள் அவர் தியானத்தில் கண்டவற்றை என்னிடம் சொல்ல ஆரம்பித்தார்.”என் தியானத்தில் உன் மனைவியைக் கண்டேன். ’ நான் என் கணவரது வருகைக்காக இங்கே காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்குள் ஒருவேளை நான் மறுபிறவி எடுக்க வேண்டி வந்தாலும் வரலாம். அப்படி நான் மறுபிறவி எடுத்தால், சென்னையிலுள்ள டாக்டர் சந்தானம் – ஜெயா சந்தானம் தம்பதிகளுக்குக் குழந்தையாகப் பிறப்பேன்’ என்றாள் அவள்” என்றார் சாது.

நான் திகைத்துப் போய் நின்று விட்டேன், காரணம், சந்தானம் என்பது என் மனைவி சாரதாவின் இளைய சகோதரர் பெயர். அவர் சென்னயில் டாக்டராகப் பணியாற்றி வந்தார். அவரது மனைவி பெயர் ஜெயா. இதை அந்தச் சாது கற்பனை கூடப் பண்ணிச் சொல்லியிருக்க முடியாது. இந்த விஷயங்களை அவரிடம் சொல்வதற்கான ஆட்களும் அப்போது என் வீட்டில் இல்லை. இது உண்மைதான் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா?’ என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணய்யர்.

இதுமட்டுமல்ல; முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் போன்றவர்களும் ஆவி உலக ஆய்வில் நம்பிக்கை கொண்டதாகவும் அவர் அந்நூலில் தெரிவித்திருக்கிறார்.

அனுபவமே உண்மை ஆசான்!


Saturday, September 20, 2014

திருஷ்டி சுத்தி போடுவது எப்படி?

திருஷ்டி என்பது சம்ஸ்கிருத சொல். தமிழில் கண். திருஷ்டி கழித்தலை தமிழர்கள் கண்ணேறு கழித்தல் என்று கூறுவார்கள்.

குழந்தை திருஷ்டி;...

பிறக்கும் குழந்தை எல்லாம் அழகுதான். அழகோ அழகுன்னு எல்லாரும் கொஞ்சறப்போ ஏற்படுற திருஷ்டிக்கு பரிகாரம் தான் கருப்பு திருஷ்டி பொட்டு. எளிமையான இது எல்லோராலும் செய்யக்கூடிய ஒன்று.நெற்றியிலும் கன்னத்திலும் இடப்படும் மைப்பொட்டு குழந்தையின் திருஷ்டியை போக்கும். கோயில்கள்ல தருகின்ற ஹோம ரட்சையை வைத்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை!.

வாலிப திருஷ்டி;

ஒருகைப்பிடி உப்பை எடுத்து கையை நல்லா மூடிகிட்டு இளைஞனையோ/வாலிப பெண்ணையோ கிழக்கு நோக்கி இருத்தி இடமிருந்து வலமா மூணுதடவையும் வலமிருந்து இடமா மூணு தடவையும்சுத்தி அப்படியே சுத்தி அந்த உப்பை தண்ணியில போட்டுடுங்க. தண்ணியில உப்பு கரையரா மாதிரி திருஷ்டி எல்லாம் கரைஞ்சி போய்விடும்.

பெரியவங்களுக்கு;

புதிய சட்டி ஒன்று, ஊமத்தங்காய், படிகாரம் தெருமண் , இவைகளை சேகரித்துக் கொண்டு பெரியவர்களை தெருவாசலில்கிழக்கு முகமாக நிறுத்தி மண்சட்டிக்குள் ஊமத்தங்காய், படிகாரம், தெருமண் இவை மூன்றையும் போட்டு மண்சட்டியை தலைக்கு இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் மூன்று முறை சுற்றி தலை முதல் பாதம் வரை இறக்கி அப்படியே எடுத்துச் சென்று முச்சந்திகள் கூடும் இடத்தில் போட்டு உடையுங்கள். கையோடு ஒரு துடைப்பம் எடுத்துச் சென்று ஓரமாக பெருக்கித் தள்ளுங்கள். இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் போகும். பின்னர் வீடு திரும்பி கைகால் கழுவி தலையில் சிறிது தண்ணீர் தெளித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழையவும் . பிள்ளையையும் அவ்வாறே செய்ய செய்து உள்ளே அழைத்துச் செல்லவும்.

சில திருஷ்டி பரிகாரங்கள் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு செய்யமுடியாது அவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

கடுகுமிளகாய், உப்பு சிறிது தெருமண், தலைமுடி இவற்றினை கையில் எடுத்துக் கொண்டு குழந்தையை உட்காரவைத்து ஊருகண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரிக் கண்ணு, நோய்கண்ணு, நொள்ள கண்ணு கண்டக்கண்ணு, கள்ளக் கண்ணு, அந்த கண்ணு, இந்த கண்ணு எல்லாம் கண்ணும் கண்டபடி தொலையட்டும் கடுகு போல வெடிக்கட்டும் என்று இடமிருந்துவலமாகவும் வலமிருந்து இடமாகவும் சுற்றி போடுவார்கள்.இதுவும் ஒரு எளிமையான திருஷ்டி பரிகாரமே!

இந்த திருஷ்டி பரிகாரங்கள் நம்முடைய முன்னோர்கள் தொன்றுதொட்டு கடைபிடித்து வந்தவை ஆகும்.இதை கடைபிடிப்பது அவரவர் விருப்பம் ஆகும்.

Friday, September 19, 2014

கணேசபுரத்து ஜமீன்



அன்று சனிக்கிழமை, சனிக்கிழமை வந்தாலே எப்பொழுதும் என் மனதில் ஒரு குதுகூலம் பிறந்துவிடும், ஏனென்றால், மறுநாள் விடுமறை என்பதால் அல்ல, அன்று ஆபீஸ் அரைநாள் மட்டுமே, அரைநாள் என்றால், ஏதோ மதியம் ஒரு மணிக்கு வேலை முடிந்துவிடும் என்று நினைக்க வேண்டாம், எப்படியும் எல்லா வேலையும் முடிக்க மணி மூன்று ஆகிவிடும், அதற்குப்பிறகு வீட்டுக்கு சென்று சாப்பிட்டு, சிறிது நேரம் மனைவிடம் சல்லாப்பித்து, மாலை ஒரு சினிமாவுக்கோ அல்லது வெளியில் எங்கேயாவது அழைத்துச் சென்று சுற்றிவிட்டு, அப்படியே இரவு உணவை, எதாவது ஹோட்டலில் முடித்து, இரவை மகிழ்ச்சியாக கழிக்கலாம் என்பதால் மட்டும் அல்ல, மறுநாள் விடுமுறை என்பதாலும் நிம்மதியாக தூங்கி விருப்பம் போல எப்பொழுது வேண்டுமானாலும் எழலாம் என்பதால் தான்.

ஆனால் சமீபகாலமாக மகிழ்ச்சி இரட்டிப்பானது, காரணம் வேறு ஒன்றுமில்லை, மனைவி தலைப் பிரசவத்திற்காக, தாய் வீடு சென்று இருப்பதாலும், அவளை வாரம் ஒரு முறை பார்த்து வருவதற்காக, ஒவ்வொரு சனிக்கிழமையும் தன் மாமனார் வீட்டிற்க்குச் சென்று வாரம் வாரம் விருந்து உண்டு வருவது தான்.

அந்த சந்தோஷமும் தற்சமயம் மூன்று மடங்கு ஆகிவிட்டது. நீங்கள் நினைப்பது சரிதான், எனக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னால், ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.சென்ற வாரம் குழந்தையைப் பார்த்ததிலிருந்து, குழந்தையின் ஒவ்வொரு அசைவும் என் கண்ணிலே இருந்து வருவதால், இன்று, எப்படியும் முன்னதாக கிளம்பி, மகளையும் மனைவியையும் பார்க்க விரும்பினேன்.

கணேசபுரம், ஒரு குக்கிராமம், சென்னைலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் அமைந்திருந்தது, கிராமம் தான் என்றாலும், பார்க்க மிகவும் ரம்மியமாக பச்சைப்பசேலென்று கண்களுக்கு குளிர்ச்சி தரும் பசுமையுடன் அமைந்து இருக்கும். .

கிராமத்தைச் சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்க, நடுவில், அந்த கிராமம். நகரின் வாசனை எதுவும் அறியாத மக்கள், ஏதோ ஒரு புதிய உலகிற்கு வந்துவிட்டோமோ என்று தோன்றும் படியாகவே இருக்கும்.

எப்படியோ ஆபீசில் பெர்மிஷன் போட்டு, மதியம் ஒரு மணிக்கே கிளம்பினேன். நேரே பாரிஸ் கார்னர் சென்று, தன் மனைவிக்கு பிடித்த இனிப்பு கார வகைகளையும் மற்றும் குழந்தையை கொசுக் கடியிலிருந்து தவிர்க்க குடை வடிவ கொசுவலையையும், கூடவே பழங்களையும் வாங்கித் தயாராக வைத்துக்கொண்டேன்.

பஸ் கிளம்ப மதியம் மூன்று மணி ஆயிற்று, எப்படியும் இங்கிருந்து வேலூர் செல்ல மூன்று மணி நேரம் ஆகும். அங்கிருந்து ஒரு மணி நேரத்திற்குள் திருப்பத்தூர் செல்லும் வழியில் இருக்கும் கணேசபுரத்தை இருட்டுவதற்குள் சென்று விடலாம் என்றுதான் மனதிற்குள் கணக்கு போட்டு வைத்திருந்தேன்..

கணேசபுரமோ, மெயின் ரோடிலிருந்து ஒரு மூன்று கிலோ மீட்டர் உள்ளே இருந்த படியால், அங்கிருந்து ஊருக்குள் செல்லும் டவுன் பஸ்ஸில்தான் எப்பொழுதும் செல்வது வழக்கம்,எப்படியும் கடைசி பஸ்சை பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்க,

வேலூர் வரைக்கும் நன்றாக சென்ற பஸ், வேலூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில், ஒரு இடத்தில் பஞ்சர் ஆகிவிட்டது, நடு வழியில் நின்று விட்டதால் என்ன செய்வதென்று தெரியவில்லை, எப்படியோ பஸ் ஓட்டுனரே, வண்டியின் டையரை மாற்றிவிட்டார். கிளம்ப கூடுதலாக ஒரு மணி நேரம் ஆயிற்று, அப்படியும் கணேசபுரம் மெயின் ரோடு செல்ல கிட்டத்தட்ட ஒன்பது மணி ஆகிவிட்டது.

இறங்கியுடன், சுற்றும் முற்றும் பார்த்தேன், அது பனிக்காலம் என்பதால், அந்த மெயின் ரோட்டில் இருக்கும் கடைகளில் ஒரு சில கடைகள் தவிர, மற்ற எல்லாம் மூடியபடி இருந்தது, ஒரே ஒரு டீக்கடையில், பெரியவர் மட்டும் டீக்கடை பெஞ்ச்களை வெளியில் இருந்து, ஒவ்வொன்றாய் உள்ளே அடுக்கிக் கொண்டிருந்தார், அநேகமாய் அவர்தான் கடையின் முதலாளியாய் இருக்க வென்றும், மெல்ல அவர் அருகில் சென்றேன்,

‘பெரியவரே, கணேசபுரம் போகணும், டவுன் பஸ் போயிடுச்சா’

‘இன்னும் போகல தம்பி, இப்ப வர்ற நேரம் தான்’

மனதிற்கு தெம்பாய் இருந்தது, எப்படியும் வந்தது விடும் என்ற நம்பிக்கையில் காத்திருக்க, மணியோ, பத்து ஆகிவிட்டது,அந்த பெரியவரோ, கடையை மூடிவிட்டு, ஒரு பெஞ்சில், துண்டை விரித்து போட்டு தூங்கத் தயாரானார். நானும் அருகில் உள்ள கடையில் ஒரு சிகரெட் பாக்கெட் வாங்கி, அதிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்தேன்.

‘பெரியவரே. மணி ஆச்சி, பஸ் இன்னும் வரலையே..’

‘சில சமயம் லேட்டா வரும்.. வராம கூட போகும், கணேசபுரம் தானே.. கொஞ்சம் பொறுத்துப் பாருங்க.. வரலைனா …அப்படியே காத்தாட நடந்து போயிடலாம் தம்பி’

அவனும் பொறுத்து பொறுத்துப் பார்த்தான், மணி வேறு பதினொன்று ஆகிவிட்டது.இனிமேல் இங்கேயே இருந்தால் ஒன்றும் ஆகப் போவதில்லை, நடந்தே சென்று விடலாம் என்று எனக்குத் தோன்றியது.இதுவரைக்கும் நடந்து சென்றதில்லை, வெளிச்சம் என்று மருந்துக்கும் இல்லை, பெஞ்சில் படுத்திருந்த பெரியவர் இருமினார்.

அவரை அடிக்கடி தொந்தரவு செயகிறேனோ என்று மனதிற்கு பட்டது, இருந்தாலும் கடைசியா அவரிடம் பொய் விசாரித்து விட்டு நடையை கட்டலாம் என்று தோன்றியது.

‘பெரியவரே.. நடந்து போன வழியில் எந்த பயமும் இல்லையே..’

‘என்ன தம்பி இந்த காலத்துல போய் பயப்படறீயே..’

‘அதுக்கில்ல, வழியில எதாவது பூச்சி, பொட்டு வருமான்னு தான் கேக்கறேன்’

‘அதெல்லாம் ஒன்னும் வராது தம்பி, வழியெல்லாம் ஒரே வயக்காடு தான், எதுக்கும் கையில ஒரு தீப்பெட்டி எடுத்துக்கோ..எதாவது சத்தம் கேட்டதுன்னா, ஒரு தீக்குச்சியை பத்த வை.. நெருப்ப பாத்தா எந்த மிருகமும் பயந்து போய்டும்..’

‘சரி பெரியவரே…. நீங்க தூங்குங்க… நான் கெளம்பறேன்’

நல்ல காலம், கையில் தீப்பெட்டி இருந்தது, சமயத்தில் சிகரெட் பிடிப்பது கூட உதவுகிறது, மனதில் நினைத்தவாறு, கணேசபுரம் செல்லும் சாலையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அதை சாலை என்று கூறுவதை விட, ஒரு மண்ணும் கல்லும் மூடிய ஒற்றையடிப் பாதை என்று தான் கூறவேண்டும், சாலை முழுவதும் சரளைக் கற்கள் பெயர்ந்து, ஒரே குண்டு குழியுமாய் இருந்தது,

இரண்டு புறமும் கருவேல முள் மரங்களும், புளிய மரங்களும், வேப்ப மரங்களும் சாலை நோக்கி வளைந்து சூழ்ந்து கிட்டத்தட்ட பாதையை மூடி, ஒரு குறுகலான தோற்றத்தை உண்டாக்கி இருந்தது, இருட்டில் பார்ப்பதற்கு ஒரு இருட்டு குகைக்குள் செல்வது போல பயமுறுத்தியது.

ஒரு நூறு மீட்டர் நடந்திருப்பேன், சாலையின் ஒரு புறம் உள்ள, கரும்பு தோட்டத்தில், கரும்பு கழிகள் லேசாக அசைய ஆரம்பித்து, காற்று தான் அசைக்கிறது என்று நினைத்தேன், சிறிது நேரத்தில் ராந்தல் விளக்குடன், ஒரு முதியவர், வரப்பில் இருந்து வெளிப்பட்டார்.

அவர் வெளியே வந்து, ரோடை அடையும் வரை பொறுமையாக, அங்கே நின்றேன்.

‘பெரியவரே..’ என்றேன் பதில் இல்லை. அருகில் சென்று மிகவும் சத்தமாக கூற..

லேசாக திரும்பிப்பார்த்தார், அவருக்கு நான் நிற்பதே தெரியவில்லை, பின்னர் தன்னுடைய ராந்தல் விளக்கை என் முகத்தில் அருகே வைத்து பார்க்க…

‘யாரு…’

‘பெரியவரே… கணேசபுரம் போயிட்டு இருக்கேன்..நான் கடைசி பஸ்ஸ தவற விட்டுட்டேன், , நீங்க எங்கே போறீங்க..’

‘ஒ..நானும் அங்கே தான் போறேன்..’

‘நல்லது பெரியவரே.. எனக்கும் தனியா போறதுக்கு கொஞ்சம் பயமா இருந்தது… வழித்துணைக்கு நீங்க வந்தது நல்லதாப்போச்சு.’

‘கால்ல குழாய் எல்லாம் மாட்டிக்கிட்டு இருக்கீங்க… பட்டணத்தில இருந்து வரீகளா..’

‘ஆமாம் பெரியவரே, எனக்கு மாமனார் வீடு இதுதான், பொண்டாட்டி தல பிரசவத்துக்காக வந்திருக்கா …அதான் பாத்திட்டு போக வந்தேன்…இந்த ராத்திரி நேரத்த்தில இங்க என்ன பண்றீங்க..’

‘கரும்பு கொல்லைக்கு தண்ணீர் விட வந்தேன்..ஒரு மணி நேரம் தான் கரண்ட்டு விட்டான, அதுக்குள்ளே போய்டுச்சி .. அதான் வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்..’

‘தனியா போறீங்களே, வழியில காத்து கருப்பு இருக்குதுன்னு சொல்றாங்களே, பயம் எதுவும் உங்களுக்கு இல்லையா…’

‘அதெல்லாம் நெறைய பார்த்திட்டேன் தம்பி… ஆனா ஒன்னும் செய்யாது’

‘என்னது… இருக்கா… நீங்க பார்த்து இருக்கிங்களா’

‘எத்தனோ முறை வழியில பார்த்து இருக்கேன்… ஆனா ஒன்னும் பண்ணாது..’

எனக்கு மனதில் கிலி பிடிக்க ஆரம்பித்தது, ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்.

‘இந்த காலத்துல போய் ஆவி, காத்து, கருப்பு எல்லாம் நம்பறீங்களா பெரியவரே..’

‘என்னதான் காலம் மாறினாலும், அதெல்லாம் உண்மைதான்.. இங்க நடமாடற ஆவி கதையை கேட்டு இருக்கீங்களா’

‘அதெல்லாம் நான் நம்பறது இல்ல..சொல்லுங்களேன்… வீட்டுக்கு போற வரைக்கும் போர் அடிக்காம இருக்கும்’

‘அப்படி எல்லாம் நினைக்காத தம்பி…இது உண்மையா நடந்தது தான்’

‘ஒரு நூறு வருஷத்துக்கு முன்னாடி, இங்க கோவிந்தசாமி நாய்க்கர்ன்னு , ஒரு ஜமீன்தார் இருந்தார், சுத்தி இருக்கிற பதினெட்டு பட்டிக்கும், அவர் தான் பெரிய நாட்டாம்மை, வசதிக்கும குறைச்சல் இல்ல..

அரண்மனை போல வீடு இருக்கும், நில புலன்களுக்கும் அளவே இல்ல, வேலை செய்யவே நூத்து கணக்குல ஆள் இருப்பாங்கா..அவருக்கு, கௌரி… லட்சுமி …

‘என்ன.. ரெண்டு போண்ண்டாட்டியா …’

‘இல்லப்பா .. ஒண்ணு தான்.. கௌரி லட்சுமின்னு அழகான மனைவி…அவருக்கு மனைவிமேல அம்ம்புட்டு பிரியம். வாழ்க்கை நல்லத்தான் போய்ட்டு இருந்தது, அப்பதான்.. …’ நிறுத்தினார்.

‘ஏதாவது அசம்பாவிதம் நடந்து போச்சா ..’

‘கொஞ்சம் பொறுப்பா… அவசப்பட்ட எப்படி.. வத்திப்பெட்டி வைச்சிருக்கியா .. சுருட்டு பிடிக்கணும் போல இருக்கு ‘ என்றவர் … மடியில் சுருட்டி வைத்திருந்த சுருக்கு பையைத் துழாவினார்.

‘பெரியவரே…என்ன தேடறீங்க…’

‘இப்பத்தான் … ஒரு சுருட்டு பிடிச்சி.. பாதியை.. இங்கதான் வச்சேன்..அதக் காணோம்..’

‘சிகரேட் பிடிப்பீங்களா…இந்தாங்க….’

‘எனக்கு சுருட்டு பிடிச்சி தான் பழக்கம்…சரி..கொடு…’ கொடுத்தேன்..

பத்த வைத்தவர்.. புகையாய் நன்றாக இழுத்து… தன்னை ஆசுவாப்படுத்திக் கொண்டார்

நானும் ஒன்றை எடுத்து பத்த வைத்தேன்..

‘இந்த வாசனை நல்ல தான் இருக்கு… ஏனோ சுருட்டுல இருக்கிற காரம் இதில இல்லையே…. ஆங்… எங்க விட்டேன்..’

‘ஜமின்தார் தன மனைவியை நேசித்தார்ன்னு சொன்னீங்க…அப்புறம் ‘

விட்ட இடத்தை எடுத்துக் கொடுத்தேன். ..

‘ஆமா.. மனைவி மேல அவருக்கு கொள்ள பிரியம்.. ஜமின்தாருக்கு காட்டுல போய் வேட்டை ஆடுறதுல்ல பைத்தியம்ன்னு சொல்லலாம். , காட்டுக்குள்ள போனாருன்னா… எப்படியும் ஒரு புலி, சிறுத்தை, இல்லாம வீட்டுக்கு வரமாட்டார்.. அதுக்காக காட்டுல ஒரு வாராம் மேல கூட தங்கிட்டு வருவார்…

அப்படி ஒரு தடவ அவர் போன பொழுது…அன்னிக்குன்னு பார்த்து…அவரே எதிர்பாக்காம.. ஒரே நாள்ல .. ரெண்டு புலிய கொன்னு .. போன அன்னிக்கு ராத்திரியே வீட்டுக்கு வந்திட்டார்…

வீட்டுக்கு வந்து பார்த்தா..அவரு மனைவி குதிரைக்காரன் கூட இருக்கிறதை . தன் கண்ணால நேர்லேயே பார்த்திட்டார்…’

‘பார்த்த உடனே குதிரக்காரனையும் மனைவியையும் கொன்னுட்டாரா….’

அவசரப்பட்டேன், முடிவை தெரிந்து கொள்ள..

‘அப்படி பண்ணி இருந்தா தான் பிரச்சினை இல்லையே… ஆனா .. அவர் பார்த்த உடனே குதிரைக்காரன் ஓடிப்போய்ட்டான்..மனைவியோ ஜமின்தார் காலில் விழுந்து கதறி அழுவுறா, அவ அழறதப் பார்த்தவுடன் அவர் மனது கொஞ்சம் இளகியது…

‘எப்போ நீ ஒருத்தன் கூட இருந்தியோ.. அப்பொழுதே இந்த வீட்டை விட்டு போய்விடு..என் முகத்தில் முழிக்காதே..’

கர்ஜித்தார்..

‘அப்படி எல்லாம் செய்திடாதிங்க… எதோ தெரியாம தவறு செய்திட்டேன்..’
மீண்டும் அவர் காலைப் பிடித்து கதற..

‘நீ செய்த தவறுக்கு.. ஊருக்கு மட்டும் நாம் கணவன் மனைவியா இருப்போம், வீட்டுக்குள்ள நீ யாரோ நான் யாரோ, இதற்கு சம்மதம்னா இரு.. ‘

வெளியில் சென்று அவமானப்படுவதை விட, இப்படியே இருந்து விடலாம் என்று முடிவு செய்தவளாய் அவர் சொன்ன நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டாள்.

‘அப்புறம்.. கதையிலே ஒரு திருப்பமே இல்லையே.. என்ன பெரியவரே… ‘

‘இருப்பா.. இனிமே தான் கதையின் முடிவே வரப்போகுது.. அதுக்குள்ளே அவசப்பட்ட எப்படி..’ அவர் அப்படி சொல்ல…

வழியில் வினோத ஒலிகள் கேட்க ஆரம்பித்தது, பாதை இருமருங்கிலும் பனை மரங்கள் வளர்ந்து. இருந்தது, போதாக்குறைக்கு காற்று வேறு பலமாக வீசியதால், காய்ந்த பனைமர மட்டைகள், ஒன்றுக்கு ஒன்று மோதி ‘சல சல’ என்று சத்தம் போட்டு பயமுறுத்தியது.

பக்கத்தில் எங்கேயோ.. குலமோ, குட்டையோ இருக்க வேண்டும், பாம்பு தவளையை துரத்தி செல்ல, பாம்பின் வாயில் மாட்டிய தவளையின் கதறல் சத்தமும், ஆந்தையின் அலறலும் துல்லியமாகக் கேட்டது.

‘என்னப்ப்ப பயமா இருக்குதா..’

‘அப்படி எல்லாம் இல்ல… இந்த சத்தம் தான்.. ‘ இழுத்தேன்.

‘நாள் செல்லச் . செல்ல, கௌரிலட்சுமிக்கு குதிரைக்காரன் மேல ஆசை கொஞ்சமும் குறையல, அதற்காக ஒரு சதித்திட்டம் போட திட்டமிட்டாள்.

ஒரு நாள், ஜமின்தார் மதிய உணவு சாப்பிட்டிட்டு, ஊஞ்சலில் சாய்ந்து ஓய்வெடுதுக்கொண்டிருந்தார், அப்ப மெதுவாக அவர் பக்கத்துல நின்னு,

‘இந்தாங்க கொழுந்து வெத்தலை போட்டுக்கோங்க..’

தன கையால் மடித்த வெற்றிலையை அவரிடம் நீட்ட..

‘என்ன இன்னிக்கு.. இதுல எதாவது விஷம் தடவி இருக்கியா..’

‘ஐயோ.. ஏன் இப்படி என்ன வார்த்தையால சித்திரவதை செய்றீங்க.. பாருங்க..நம்பிக்கையில்லனா… நானே போட்டுக்கறேன்.. அப்படின்னு சொல்லிட்டு …அவளே அந்த வெத்தலைய தன வாயில் போட்டு மெல்ல ஆரம்பிச்சுதமே ..’

ஜமீன்தார கொஞ்சம் சமாதானாமானார். .

‘நான் ஒரு யோசனை சொல்லவா. பேசாம அவன கொன்னுடலாம் .. அப்புறம் உங்களுக்கு என் மேல நம்பிக்கை வரும் இல்லையா’

தன திட்டத்தை மெதுவா அவர் காதுல போடா ஆரம்பிச்சா..

அவரும் யோசித்தார், அவருக்கும் சரியென்று பட்டது..அதற்கான திட்டமும் தீட்டப்பட்டது… ..

ஜமின்தார் மறுபடியும் வேட்டைக்கு சென்றிருப்பதால், தன்னை வந்து சந்திக்க அய்யனார் கோவிலுக்கு வருமாறு, அந்த குதிரைக்காரனுக்கு தனக்கு விசுவாசமான் ஒருத்தர் மூலம் தகவல் தெரிவித்தாள் …கௌரிலட்சுமி,

அவன் அங்கு வந்தால், அவனை ஜமீன்தார் மூலம் கொலை செய்துவிட்டு, பழியை காத்து, கருப்பு, ஆவி மேல் போட்டு விடலாம. என்ற திட்டத்துடன் இருக்க…

அந்த குதிரைக்காரனும் சரியாக அங்கு வர…

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இணையும் காதலர்கள் போல அவர்கள் சந்திக்க, அதை ஜமீன்தார், ஒரு மறைவில் இருந்து பார்த்துக்கொண்டே..மெதுவாக.. அவன் அருகில் வந்து, தன கையில் இருந்த கத்தியால் குத்த முயலும் பொழுது…’ நிறுத்தினார்..

அதற்குள் அந்த ஊரின் எல்லை காவல் தெய்வமான அய்யனார் சிலை சிறிது தூரத்தில் கம்பீரமாக வீற்றிருக்க…ஊர் எல்லையை அடையப் போகிறோம் என்பதை உணர்ந்தான். ..தூரத்தில் … சில வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றும் இருப்பதை.பார்த்தான்..

‘என்ன பெரியவரே…நிறுத்திட்டிங்க…’

‘ஒண்ணும் இல்லப்பா ….அந்த கௌரிலட்சுமி .கௌரிலட்சுமி…’.

ஏனோ தெரியவில்ல.. கடைசியில் அந்த பெயரைக் கூறிய பொழுது, அவர் குரல் முன் போல இல்லை, குரல் தழுதழுத்தது.. கண் கலங்கியதா…இல்லை கண்ணில் தூசி பட்டதா.. தெரியவில்லை… .

‘அதற்குள், தான் ஆசை ஆசையாய் இருந்த கௌரிலட்சுமியே மறைத்திருந்த கத்தியால் ஜமினதாரின் மார்பில் குத்த, குதிரைக்காரனும் தன் பங்கிற்கு சேர்ந்து கத்தியால் குத்த .. அவர் உயிர் அப்பொழுதே பிரிந்தது..

‘அடிப்பாவி..’ என்றேன்..

‘மறுநாள்… ஜமீன்தாரை… காட்டு புலி கொன்றதாக ஒரு புரளியைக் கிளப்பி.. ஊர் மக்களை நம்பவைத்தாள் கௌரிலட்சுமி…

‘அன்னிக்கு இருந்துதான்.. அந்த ஜமீன்தார் ஆவி… இங்கேயே சுத்திக்கிட்டு இருக்கு..’

‘அப்புறம் எப்படி தான்… அவங்க ரெண்டு பேருக்கும் மட்டும் தெரிந்த அந்த ரகசியம் மத்தவங்களுக்கு தெரிஞ்சது பெரியவரே…’

அதற்குள்… அய்யனார் கோவிலை அடைந்து விட்டேன்…

சுற்றும் முற்றும் பார்க்க… பக்கத்தில் நடந்து வந்த பெரியவரைக் காணவில்லை…

பெரியவரே.. பெரியவரே.. சத்தமாக கூச்சலிட்டுப் பார்த்தேன்.. ..

அவரைக் எங்கும் காணவில்லை….அருகில் நடந்து வந்தவர்… அய்யனார் கோயில் வந்த உடனே …. காணவில்லையே..

ஒருவேளை வந்தவர் தான் அந்த ஜமீன்தாரோ … இவ்வளவு நேரம் அவருடன் தான் பேசிக்கொண்டு வந்தேனோ .. ஊரின் தெரு வீதியை அடைந்தும் .. மனதில் இருந்து பயம் விலகிய பாடில்லை…

அன்று ஏற்பட்ட அந்த அனுபவம் இன்று வரையில் என் வாழ்க்கையில்… ஒரே மர்மமாக இருக்கிறது….

தூக்கம் வராமல், இறந்து போன தன் தந்தை சிவராமனின் பழைய ட்ரங்க் பெட்டியில் இருந்த எடுத்த டைரியில், 4-11-1972 அன்று எழுதிய மேல் சொன்ன பகுதியை படித்ததிலிருந்து கணேஷுக்கு..கொஞ்சம் நஞ்சம் வந்த தூக்கமும் போய் விட்டது..

சமையல் அறைக்குள் சென்று, ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்தலாம் என்று குடிக்கச் செல்ல..

‘என்னப்பா… கணேஷ்.. தூக்கம் வரலையா’

அதிர்ச்சியுடன் குரல் கேட்டு திரும்ப, இறந்து போன தன் தந்தை எதிரில் நின்று கொண்டு இருந்தார்.