My Twitter Favorites


பயணங்கள் எப்பொழுதுமே மனிதனை மேம்படுத்துகின்றன ; அவனை உளவியல் ரீதியாக மாற்றுகின்றன...

Friday, September 25, 2015

பிரமிக்கவைக்கும் பிரமிடு அற்புத அதிசயங்கள்..

Print Friendly and PDF


பிரபஞ்ச சக்தியை பல மடங்கு கிரகித்து மனிதன் உடம்பிற்குள் செலுத்தும் பிரமிக்கவைக்கும் பிரமிடு அற்புத
அதிசயங்கள்..
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
★பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை ஈர்த்து
தன்னுள் தக்க வைக்கும்அமைப்பு
பிரமிடாகும். பிரபஞ்ச சக்தியின்
வீச்சும், புவி ஈர்ப்பு விசையும் சேர்ந்த
கலவையால் பெறப்படும் ஆற்றல் தான்
பிரமிடின் ஆற்றலாகும்.
பிரமிடுகள் தங்களுக்குள் சக்தியை
வெகுவாகக் கொண்டிருக்கின்றன..
.
★பிரமிடு வடிவம் உள்ளேயும்,
வெளிப்புறத்திலும்கூட தன் ஆற்றலால்
தட்பவெப்ப நிலையிலிருந்து
பொருட்களுக்கு புத்துணர்ச்சி
தருவதை மிக விஞ்ஞானப்
பூர்வமான உணரமுடிந்தவை...

★பிரமிடுகளின் கூம்பு வடிவ
அமைப்பு, சுற்றுப்புறத்திலிருந்து
ஒரு வித மின்காந்த ஆற்றலை உள்
வாங்குகிறது.
பிரமிடின் உச்சிப்பகுதி, அந்த ஆற்றலை,
பிரமிடின் உள்பகுதியில் ஒரே சீராகப்
பரவ வைப்பதுதான் ரகசியம் ..
.வடிவமைக்கப்பட்ட வடிவ கணித
கனவடிவமான பிரமிட், பிரபஞ்ச சக்தியை
ஒன்றுதிரட்டி சேமிக்கும்
தன்மையுடையது என்ற உண்மையை,
பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னரே,
அக்கால எகிப்திய அறிஞர்கள்
அறிந்திருந்தனர்.
★எனவே பிரமிடை
வடிவமைத்து, பயன்படுத்தினர்.
சாதரணமாக கெட்டுப்போகும் பழம், பால்
போன்றவை பிரமிடின் உள்ளே
கெட்டுப்போகாமல் இருக்கின்றன். காபி,
ஒயின், பழச்சாறு போன்றவற்றின் ருசி
அதிகமாகின்றது. பிளேடு, கத்தி
போன்றவற்றின் கூர்மை மழுங்காமல்
இருக்கின்றன. .பதப்படுத்தி காத்தல்
,துர்நாற்றத்தை நீக்கி, அறையின்
தூய்மையைக் காக்கின்றது பிரமிட்.
காயங்கள், கட்டிகள், சிராய்ப்புகள்
முதலியன விரைவில்
குணமடைகின்றன.
★உடல் பருமனைக்
குறைத்து, நோய் எதிர்ப்புச் சக்தியை
அதிகரிக்கின்றது.
ஆஸ்துமா, பல்வலி, தலைவலி,
சளித்தொந்திரவு, இரத்த அழுத்தம்,
மூட்டுவலி, இதயத்துடிப்பு,
தூக்கமின்மை போன்றவற்றை
குணப்படுத்துகின்றது.
கண் சம்பந்தப்பட்ட நோய். ஜீரணக்கோளாறு,
தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் இவைகளை
குணப்படுத்தி இளமையை
அளித்து.சிகிச்சை அளித்தல் பிரமிட்
சக்தி!

★பிரமிடினுள் தியானம் செய்யும்
பொழுது அகவுடல் பிரயாணம்
மிக எளிதாக நிகழ்கின்றது.
வாழ்வின்பூமியின் அடியில் எங்கும் நீர்
நிறைந்துள்ளது; ஆனால், நமக்கு தண்ணீர்
வேண்டுமானால், ஒரு
கிணற்றிலிருந்தோ,
குளத்திலிருந்தோ தான் எடுக்க
வேண்டியுள்ளது. பிரமிடுகளைப்
பற்றிய பல பிரமிப்பானத் தகவல்களை
.பிரமிட் தியானத்தினால் மிகத்
தெளிவாக நினைவில் உணரமுடியும்
சூட்சுமம் நிறைந்தவை..!

★உலகின் கண்டங்களையும் கடல்களையும்
சரிபாதியாகப் பிரிக்கும் மெரிடியன்
என்ற கோட்டின் மேல்
அமைக்கப்பட்டுள்ளன.
எப்போதுமே குன்றுள்ள இடத்தைச்
சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் சக்தி
இயற்கையாகக் குடிகொண்டிருக்கும்.
அதற்கு குன்றினுடைய பிரமிடு
போன்ற வடிவம் ஒரு காரணம்.
நாமக்கல் மலைக்கோட்டை , திருச்சி
மலைக்கோட்டை, திண்டுக்கல்
மலைக்கோட்டை போன்றவை சக்தி
அதிர்வுகளை தன்னக்த்தே கொண்டு
மிளிர்கின்றன..

★அனைத்து சமய வழிபாட்டு தலங்களும்
பிரமிட் போன்ற ஒரு கூம்பு வடிவமான
அமைப்பில் தான் இருக்கும். தஞ்சை
பெரிய கோவிலும் , மற்றஆலய
கோபுரங்களும் பிரபஞ்ச அதிர்வுகளை
ஈர்த்து மனத்திற்குப்புத்துணர்வு
அளிப்பதில் பெரும்பங்காற்றுகின்றன..!

★விழிப்புணர்விடன் நிகழும் அகவுடல்
பயணத்தில் பெறப்படும் அறிவின்
துணைகொண்டு அக்கால அறிஞர்கள்
"பெரிய பிரமிடை கட்டினார்கள். இது
நம்மை மிக உயர்ந்த நிலைக்கு
அழைத்துச் செல்லும் சாதனமாக
அமைக்கப்பட்ட கருவியாகும்
.பிரமிடின் கீழ் அல்லது பிரமிடுக்குள்
அமர்ந்து செய்யும் தியானம் 'பிரமிட்
தியான'மாகும்.
பிரமிடினுள் அமர்ந்து செய்யும்
தியானத்தில் சாந்தமான
மனநிலையிலிருந்து, மிக உன்னதமான
நன்னிலை உணர்வைப் பெறும் அனுபவத்
திறனையும் பலர் பெற்றுள்ளனர்.
★பிரமிடினுள் அமர்ந்து தியானம்
செய்யும் பொழுது, பிரமிட் இல்லாமல்
செய்யும் தியானத்தில் பெறும்
ஆற்றலைவிட மும்மடங்கு ஆற்றலைப்
பெறுகின்றோம்.
பிரமிட் தியானத்தில் தேவையற்ற
உணர்ச்சிகளும் எண்ணங்களும் நீங்கி, உடல்
முழுவதும் ஒரு ஓய்வு நிலையை
அடைந்து, மனம் ஒருநிலைப்பட்டு
உள்நோக்கி பயணம் செய்யும் உன்னதமான
உணர்வு நிலையைத் தருவதாக
உணரலாம்..

★தியானத்தின் ஆரம்ப நிலையில்
உள்ளவர்களுக்கு மிக அதிகமன
ஆற்றலுள்ள சூழ்நிலையை பிரமிட்
உருவாக்குகின்றது.
மன அழுத்தம், மனச்சோர்வு இவற்றை நீக்க,
பிரமிட் உதவுகின்றது. பிரமிடினுள்
செய்யப்பட்ட பல சோதனைகளிலிருந்து
அறிகிறோம்..
இந்த பிரமிட்டுக்குள் இருந்து தியானம்
செய்தால் மனதை
ஒருமைப்படுத்துவதை பலமடங்கு
இலகுவாககுகிறதாம்.
பிரபஞ்சத்திலுள்ள சக்திகளுடன்
தொடர்புகொள்ள வைக்கிறதால் தான்
இது சாத்தியமாகிறது.
.மனிதனின் அதிசய தக்க ஆற்றல்
,அறிவியலுக்கும் ஆட்படாத அதிசயங்கள்
பல நூற்றாண்டுகள் கடந்தும் ,இன்னும்
பல நுற்றாண்டுகளை கடக்க இருக்கும்
அற்புதத்தை உணரவேண்டும்..
கோவையில் பெர்கஸ் பள்ளி வளாகத்தில்
பிரமிடு அமைப்பை அமைத்து இராம
.அரங்கநாதன் அவர்கள் அதன் சிறப்புகள்
பற்றி புத்தகங்கள் எழுதியுள்ளார்.

★கோவை பஜனகோல மாருதி ஆலயத்தில்
பிரமிடு வடிவ தியான மண்டபம்
அமைத்து அதனுள் ஆன்மீக அதிர்வலைகள்
சிதறாமல் தியானம் செய்பவருக்கு
கிடைக்க ஏற்பாடு செதிருக்கிறார்கள்..
பஜன மாருதி ஆலய வளாகத்தில்
பிரமிடு வடிவ தியானமண்டபம்.
பிரமிடின் உட்புற தியான அமைப்பு..

★வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில்
அமைந்திருக்கும் ஈஷா யோக
மையத்தில் தியானலிங்கத்தைசுற்றி
குகைகள் போன்ற அமைப்பு அமர்ந்து
சின்முத்திரை தாங்கி
குறிப்பிட்டநேரம் தியானம்
செய்பவருக்கு அதிர்வலைகளை
ஏற்படுத்துவதை கண்கூடாக
உணர்ந்திருக்கிறோம்..
★ரமண மகரிஷி திருவண்ணாமலை
பாதாள லிங்கம் சன்னதியில் அமர்ந்து
தியானித்த இடத்தையும் ,
ஞானானந்தகிரி சுவாமிகளும் ,
அவரது குருவான இரத்னானந்தகிரி
சுவாமிகளும் அமர்ந்து தியானித்த
சுரங்க அறையில் அமைதியாக அந்த
அதிர்வலைகளை உணரமுடிகிற சூழல்
நிலவுவதை அறியமுடிகிறது..
★இல்லத்தில் அமர்ந்து தியானிப்பதைவிட
ஆலயங்களிலும் ,
பிரமிட் வடிவ தியானமையங்களிலும்
,மனம் ஒருமைப்படுவதை உணரலாம்..

Tuesday, September 22, 2015

மர்ம கிமோனோ

Print Friendly and PDF

1657 மார்ச் 4 அன்று டோக்கியோ என்ற நகரமே சுடுகாடு ஆகிப் போனதன் பின்னணியில் உள்ள மர்மத்துக்கு விடை கிடையாது.
இன்றைய டோக்கியோவின் அன்றைய பெயர் இடோ ஜப்பானின் மிகப்பெரிய வணிக நகரம். சுமார் மூன்று லட்சம் பேர் வசித்தார்கள். நெருக்கமாக அமைத்த வீடுகள் (மரத்தால் காகிதக் கூழினால் ஆனவை), குறுகலாக அமைந்த தெருக்கள், நீளமான சந்தைகள் நிறைய கோயில்கள், பாலங்கள் கொண்ட நகரம் அது.
கனத்த சாரீரமுடைய ஒருவர் தும்மினால்கூட நில அதிர்வு ஏற்படும் சபிக்கப்பட்ட தேசம்தானே ஜப்பான். 1657 மார்ச் 2 அன்று நண்பகலில் ஏதோ ஓரிடத்தில் சிறிய அளவில் நெருப்பு பரவ ஆரம்பித்தது. எங்கிருந்தோ கிளம்பி வந்த சூறாவளிக் காற்று அந்த நெருப்பின் இருப்பை பல மடங்காக்கியது. அந்தக் காலத்திலேயே இடோ நகரில் தீயணைப்பு படை இருந்தது. ஆனால் அளவில் மிகச் சிறியது. அவர்கள் நெருப்பிடம் தோற்றுப் போனார்கள். மார்ச் இரண்டாம் தேதி இன்முகத்துடன் தன் சேவையைத் தொடங்கிய தீ, மூன்றாம் தேதி முழுவதும் மும்முரமாக வேலை பார்த்துவிட்டு நான்காம் தேதி நண்பகலுக்குப் பின்னரே ஓய்வெடுக்கச் சென்றது.
புகைமூட்டத்தினுள் புதைந்திருந்த இடோ நகரில் கால்வைத்த இடமெல்லாம் கருகிய உடல்கள் அந்தப் பேரழிவு நெருப்பு பரவ காரணம் என்ன?
நில அதிர்வாகத்தான் இருக்கும் என்பது பொதுவான கருத்து. ஆனால் இன்றைக்கும் ஜப்பானியர்களை கேட்டால் இடுங்கிய கண்களில் பயம் பரவ, நடுங்கும் குரலுடன் அந்த சம்பவத்தை சொல்வார்கள்.
ஜப்பானிய இளம்பெண் ஒருத்தி விலையுயர்ந்த பகட்டான கிமோனோ(kimono, ஜப்பானியப் பெண்கள் அணியும் முழுநீள கவுன்) ஒன்றை வாங்கி ஆசையுடன் அணிந்தாள். ஏனோ அடுத்த சில நாள்களிலேயே நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்தாள். என்ன நோயென்று பிறர் அறியும் முன்பே செத்துப் போனாள்.
அவள் ஆசையுடன் வாங்கி வைத்திருந்த கிமோனோ, இன்னொரு இளம்பெண்ணுக்கு விற்கப்பட்டது. அவளும் அணித்துகொண்டு அழகு பார்த்தால் மர்ம நோயொன்று அவளை அணிந்துகொண்டு அழகு பார்த்தது. இரண்டாமவளும் இறந்து போனாள். மூன்றாவதாக கிமோனோ, இன்னொரு இளம்பெண்ணிடம் சென்று சேர்ந்தது. அவளுக்கும் அதே கதி. அதோ கதி.
இடே நகரமெங்கும் விஷயம் பரவியது. ' அந்த கிமோனோவில் துர்சக்தி ஏதோ புகுந்துள்ளது. அதுதான் மூன்று இளம்பெண்களின் உயிரை எடுத்துள்ளது. மதகுரு ஒருவரிடம் அந்த மர்ம கிமோனோ ஒப்படைக்கப்பட்டது. ஊரே கூடி நிற்க மதகுருவும் அந்த கவுனைப் பரப்பி வைத்து மந்திரமெல்லாம் ஓதி சடங்குகள் செய்து எரிகின்ற கட்டை ஒன்றை எடுத்து அந்த கிமோனோவுக்குக் கொள்ளி வைக்க....
அச்சுறுத்தும் ஊளைச் சத்தத்துடன் சூறாவளிக் காற்று ஒன்று எங்கிருந்தோ கிளம்பி வர.... உயரமாகக் கிளம்பிய தீ, திகுதிகுவென வேகமாகப் பரவ...
அந்த சம்பவத்தால் ஏற்பட்ட இழப்பு சுமார் ஒரு லட்சம் மனித உயிர்கள். பல்லாயிரக்கணக்கான கால்நடைகள். முந்நூறு கோயில்கள். அறுபது பாலங்கள் அநேக கட்டடங்கள். 60-70 சதவிகித இடோ நகரமே தீக்கிரையாகியிருந்தது. இதுவரை ஜப்பான் சந்தித்த பேரழிவுகளில் இதுவும் ஒன்று.

Saturday, September 19, 2015

Heroin என்னும் ஆட்கொல்லி...

Print Friendly and PDF

உலக நாடுகள் அனைத்திலும் தடை செய்யப்பட்ட போதை பொருள் ஹெராயின் பொதுவாக திரைப்படங்கள் மற்றும் செய்திகளில் மிக கொடூரமாக சித்தரிக்க படும் இந்த போதை பொருள் அவ்வளவு கொடியதா ?

எள்ளளவும் இதில் சந்தேகம் கொள்ளவேண்டாம் இன்னும் போனால் நாம் திரைப்படங்களில் பார்த்த செய்திகளில் படித்ததை விட மிகவும் கொடிய போதை பொருளாகும் இந்த ஹெராயின் .

" களவும் கற்று மற " என்னும் பழமொழிக்கு ஏற்ப போதை பொருளாகினும் அதன் வரலாறு ,பாதிக்கப்பட்டவர்களின் செயல்பாடு ,கொடூர தன்மை பற்றி நாம் தெளிவாக அறிந்துகொள்ளவேண்டும் .

ஹெராயின் பயன்பாட்டாளர்கள் அதிகபட்ச்சமாக விடலை பருவத்தினர் மற்றும் வாலிபர்களே அதிகமாக பயபடுத்துகிரார்கள் என்பது அதிர்ச்சிக்குரிய உண்மை .
ஒரேஒரு முறை பயன் படுத்தி பார்க்கலாம் என்று ஆரம்பித்தவர்கள் அனைவரும் ஒன்று அதற்க்கு அடிமையாகி இருப்பார்கள் அல்லது உயிர்துறந்து இருப்பார்கள் .

சாம் என்னும் 15 வயது சிறுவன் தான் எப்படி Heroin க்கு அடிமையாகினேன் என்று விவரிக்கிறான் .
"முதலில் அதை பயன் படுத்திய பொழுது எனக்கு என்னை காணும் பொழுது மிகவும் கவர்ச்சியாக இருந்தது , மிகவும் துடிப்பாக செயல் பட்டேன் எதற்கும் தயக்கமின்றி நடந்துகொண்டேன் என்னை சுற்றி உள்ளவர்கள் அனைவரின் கவனும் என்னை நோக்கி இருப்பதாக நான் உணர்ந்தேன் ..நாட்கள் செல்ல செல்ல Heroin தேவை அதிகமானது அதை உடலில் சிலுத்தி கொள்ளவிட்டால் என்னால் சாதாரண செயல் பாடுகளை கூட செய்ய முடியாத நிலைக்கு ஆளானேன் ... நண்பர்கள் பெற்றோர் அனைவரும் என்னை வெறுத்து ஒதுக்கினார்கள் , என்னுடைய சேமிப்புகள் கரைந்தன ..."
வரலாறு -
1898 ஆம் ஆண்டு Bayer pharmaceutical company என்னும் ஜெர்மானிய நிறுவனம் tuberculosis நோய்க்கு மருந்தாக உருவாக்கியதுதான் இந்த கொடூர உயிர்கொல்லி ஹெராயின்.

யாருக்கு தெரியும் நாம் இன்று பயன் படுத்தும் ஹலோபதி மருந்துகள் பலவும் இது போன்ற ஆட்கொல்லிகளாக இருக்கலாம் .

சரி இது எப்படி போதை பொருளாக மக்கள் கைக்கு வந்தது ?

1850களில் opium என்னும் போதை பொருளுக்கு பல அமெரிக்க மக்கள் அடிமையாக இருந்தனர் . இதனை தடுக்க எண்ணிய அமெரிக்க அரசு Morphine என்னும் மாற்று பொருளை பயன்படுத்தியது இதுவும் opium போல போதை தந்தாலும் இது மக்களை அதற்க்கு அடிமையாக்காது என்று கூறப்பட்டது . opium பயன்பாடு குறைத்து மக்கள் Morphineக்கு அடிமையாகினர் .

இப்பொழுது Morphine னுக்கு இதற்க்கு மாற்றாக மீண்டும் அரசு ஆடிமையாக்காத போதை பொருளாக அறிமுகம் செய்ததே இந்த Heroin .

இப்படி தான் ஒன்று பொய் ஒன்றாக மிக விரியமான உயிர்கொல்லியான போதை பொருட்கள் அரசால் மக்களிடையே பரப்பப்பட்டது . இன்றைய அளவில் Heroine பிடியில் உலக மக்கள் பலர் அடிமையாகி வாழும் நிலையில் இதில் இருந்து தப்பிக்க இப்பொழுது ஜெர்மன் கண்டுபிடிப்பான Dolophine பயன்படுத்தபோகிறது .

எதிர்காலத்தில் இதுவும் ஒரு பெரும் போதை பொருளாக மாறலாம் .
ஒரு போதை பொருளின் தாக்கத்தை போக்க மாற்றாக வேறு ஒரு சக்த்திவாய்ந்த வேறு ஒரு போதை பொருளே இன்று வரை கடைபிடிக்கபடுகிறது என்பது இதில் இருந்து தெளிவாகிறது .

அரசாங்கம் திட்டமிட்டு மக்களை மந்தமாக வைத்துகொல்லவே அரசே புதிய புதிய போதை பொருள்களை உருவாக்கி அதை மக்களிடையே பரப்பி விடுகிறது என்பது ஏற்பதற்குரிய வாதமே .

நமது டாஸ்மாக் முதல் உலகின் Class 1 போதை பொருட்கள் வரை அதன் பின்னுட்டங்களில் செயல் படும் குழுக்களுக்கு மேல் இருப்பது நம் அரசுகளே என்பது அதிர்ச்சிக்குரிய உண்மையாகும் .

விரியமற்ற ஒருசில போதை தரும் தாவரங்களில் இருந்து முக்கிய வேதி பொருட்களை எடுத்து அதனுடன் சில செயற்கை போதை பொருட்களை கலந்து வேதியல் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு உருவாக்கபடுவதே இவை . இந்த செயல் பாடுகளின் பின்னுட்டத்தில் உலக அரசுகளின் பங்கு அதிகம் .

மக்கள் மந்தமாக இருந்தால் தான் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகும் பாமரன் அரசாட்சி யோசனை செய்யமாட்டன் கேள்விகள் கேட்கமாட்டான் கிளர்ச்சிகள் எழாது .
மக்களை மந்தமாக்க அரசு பயன்படுத்தும் ஆயுதங்களில் ஒன்றே இந்த போதை பொருட்கள் .