My Twitter Favorites


பயணங்கள் எப்பொழுதுமே மனிதனை மேம்படுத்துகின்றன ; அவனை உளவியல் ரீதியாக மாற்றுகின்றன...

Saturday, September 19, 2015

Heroin என்னும் ஆட்கொல்லி...

Print Friendly and PDF

உலக நாடுகள் அனைத்திலும் தடை செய்யப்பட்ட போதை பொருள் ஹெராயின் பொதுவாக திரைப்படங்கள் மற்றும் செய்திகளில் மிக கொடூரமாக சித்தரிக்க படும் இந்த போதை பொருள் அவ்வளவு கொடியதா ?

எள்ளளவும் இதில் சந்தேகம் கொள்ளவேண்டாம் இன்னும் போனால் நாம் திரைப்படங்களில் பார்த்த செய்திகளில் படித்ததை விட மிகவும் கொடிய போதை பொருளாகும் இந்த ஹெராயின் .

" களவும் கற்று மற " என்னும் பழமொழிக்கு ஏற்ப போதை பொருளாகினும் அதன் வரலாறு ,பாதிக்கப்பட்டவர்களின் செயல்பாடு ,கொடூர தன்மை பற்றி நாம் தெளிவாக அறிந்துகொள்ளவேண்டும் .

ஹெராயின் பயன்பாட்டாளர்கள் அதிகபட்ச்சமாக விடலை பருவத்தினர் மற்றும் வாலிபர்களே அதிகமாக பயபடுத்துகிரார்கள் என்பது அதிர்ச்சிக்குரிய உண்மை .
ஒரேஒரு முறை பயன் படுத்தி பார்க்கலாம் என்று ஆரம்பித்தவர்கள் அனைவரும் ஒன்று அதற்க்கு அடிமையாகி இருப்பார்கள் அல்லது உயிர்துறந்து இருப்பார்கள் .

சாம் என்னும் 15 வயது சிறுவன் தான் எப்படி Heroin க்கு அடிமையாகினேன் என்று விவரிக்கிறான் .
"முதலில் அதை பயன் படுத்திய பொழுது எனக்கு என்னை காணும் பொழுது மிகவும் கவர்ச்சியாக இருந்தது , மிகவும் துடிப்பாக செயல் பட்டேன் எதற்கும் தயக்கமின்றி நடந்துகொண்டேன் என்னை சுற்றி உள்ளவர்கள் அனைவரின் கவனும் என்னை நோக்கி இருப்பதாக நான் உணர்ந்தேன் ..நாட்கள் செல்ல செல்ல Heroin தேவை அதிகமானது அதை உடலில் சிலுத்தி கொள்ளவிட்டால் என்னால் சாதாரண செயல் பாடுகளை கூட செய்ய முடியாத நிலைக்கு ஆளானேன் ... நண்பர்கள் பெற்றோர் அனைவரும் என்னை வெறுத்து ஒதுக்கினார்கள் , என்னுடைய சேமிப்புகள் கரைந்தன ..."
வரலாறு -
1898 ஆம் ஆண்டு Bayer pharmaceutical company என்னும் ஜெர்மானிய நிறுவனம் tuberculosis நோய்க்கு மருந்தாக உருவாக்கியதுதான் இந்த கொடூர உயிர்கொல்லி ஹெராயின்.

யாருக்கு தெரியும் நாம் இன்று பயன் படுத்தும் ஹலோபதி மருந்துகள் பலவும் இது போன்ற ஆட்கொல்லிகளாக இருக்கலாம் .

சரி இது எப்படி போதை பொருளாக மக்கள் கைக்கு வந்தது ?

1850களில் opium என்னும் போதை பொருளுக்கு பல அமெரிக்க மக்கள் அடிமையாக இருந்தனர் . இதனை தடுக்க எண்ணிய அமெரிக்க அரசு Morphine என்னும் மாற்று பொருளை பயன்படுத்தியது இதுவும் opium போல போதை தந்தாலும் இது மக்களை அதற்க்கு அடிமையாக்காது என்று கூறப்பட்டது . opium பயன்பாடு குறைத்து மக்கள் Morphineக்கு அடிமையாகினர் .

இப்பொழுது Morphine னுக்கு இதற்க்கு மாற்றாக மீண்டும் அரசு ஆடிமையாக்காத போதை பொருளாக அறிமுகம் செய்ததே இந்த Heroin .

இப்படி தான் ஒன்று பொய் ஒன்றாக மிக விரியமான உயிர்கொல்லியான போதை பொருட்கள் அரசால் மக்களிடையே பரப்பப்பட்டது . இன்றைய அளவில் Heroine பிடியில் உலக மக்கள் பலர் அடிமையாகி வாழும் நிலையில் இதில் இருந்து தப்பிக்க இப்பொழுது ஜெர்மன் கண்டுபிடிப்பான Dolophine பயன்படுத்தபோகிறது .

எதிர்காலத்தில் இதுவும் ஒரு பெரும் போதை பொருளாக மாறலாம் .
ஒரு போதை பொருளின் தாக்கத்தை போக்க மாற்றாக வேறு ஒரு சக்த்திவாய்ந்த வேறு ஒரு போதை பொருளே இன்று வரை கடைபிடிக்கபடுகிறது என்பது இதில் இருந்து தெளிவாகிறது .

அரசாங்கம் திட்டமிட்டு மக்களை மந்தமாக வைத்துகொல்லவே அரசே புதிய புதிய போதை பொருள்களை உருவாக்கி அதை மக்களிடையே பரப்பி விடுகிறது என்பது ஏற்பதற்குரிய வாதமே .

நமது டாஸ்மாக் முதல் உலகின் Class 1 போதை பொருட்கள் வரை அதன் பின்னுட்டங்களில் செயல் படும் குழுக்களுக்கு மேல் இருப்பது நம் அரசுகளே என்பது அதிர்ச்சிக்குரிய உண்மையாகும் .

விரியமற்ற ஒருசில போதை தரும் தாவரங்களில் இருந்து முக்கிய வேதி பொருட்களை எடுத்து அதனுடன் சில செயற்கை போதை பொருட்களை கலந்து வேதியல் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு உருவாக்கபடுவதே இவை . இந்த செயல் பாடுகளின் பின்னுட்டத்தில் உலக அரசுகளின் பங்கு அதிகம் .

மக்கள் மந்தமாக இருந்தால் தான் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகும் பாமரன் அரசாட்சி யோசனை செய்யமாட்டன் கேள்விகள் கேட்கமாட்டான் கிளர்ச்சிகள் எழாது .
மக்களை மந்தமாக்க அரசு பயன்படுத்தும் ஆயுதங்களில் ஒன்றே இந்த போதை பொருட்கள் .