My Twitter Favorites


பயணங்கள் எப்பொழுதுமே மனிதனை மேம்படுத்துகின்றன ; அவனை உளவியல் ரீதியாக மாற்றுகின்றன...

Wednesday, October 28, 2015

நேதாஜியின் மரண மர்மங்கள்


Print Friendly and PDF


டயானா,கென்னடி போன்றோரின் மரணங்களுக்கு இணையான மர்மம் உடையது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மரணம்,அவர் உண்மையில் இறந்தாரா,இல்லை அவ்வாறு நம்ப வைக்க உண்டாக்கிய சூழ்ச்சியா?,சூழ்ச்சிக்கான காரணம் என்ன?பிண்ணணியில் உள்ள அரசியல் சதுரங்க ஆட்டம் என்ன? போன்றவற்றை இத்தொடரில் விரிவாக காண்போம்.

சுதந்திரம் கிடைக்கும் முன் சிங்கப்பூர் சென்றார் நேதாஜி,சிங்கப்பூரில் இருந்து பாங்காக் நகருக்கு விமானத்தில் புறப்பட்ட நேதாஜி, பாங்காக்கில் இருந்து வியட்நாமில் உள்ள சைகோனுக்கு ராணுவ தளபதிகளுடன் சென்றார்.

சைகோன் விமான தளத்தில் ஜப்பான் போர் விமானம் ஒன்று புறப்பட தயார் நிலையில் இருந்தது, கடைசி நேரத்தில் விமானத்தில் ஒருவருக்கு மட்டுமே இடம் உள்ளது என்று ஜப்பான் அதிகாரிகள் கூறினர்.

உடனே செல்லவா? வேண்டாமா? என்று யோசித்த நேதாஜி, அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் எந்நேரமும் சைகோனை கைப்பற்றலாம் என்று இருந்ததால் விமானத்தில் செல்வது என்று முடிவு செய்தார்.
கடைசி நேரத்தில் மற்றொருவர் வரலாம் என்று அதிகாரிகள் கூறியதால் தன்னுடன் ஹபிப்-வுர்-ரஹ்மான் அவர்களையும் அழைத்து கொண்டு விமானத்தில் ஏற அங்கிருந்த மற்றவர்களை பார்த்து நேதாஜி 'ஜெய்ஹிந்த் ' என்று கூற விமானம் புறப்பட்டது.

சிறிது நேரத்தில் விமானம் விபத்துக்குள்ளானது என்றும் அதில் நேதாஜி இறந்து விட்டதாகவும் ஜப்பான் அரசு அறிவித்தது.

ஆனால் நேதாஜியை தப்பிக்க வைக்க ஜப்பான் போட்ட திட்டம் தான் அது, உண்மையில் அப்படி ஒரு விபத்து நடந்திருக்க வாய்ப்பு இல்லை.

1945 ஆகஸ்ட் 18 ம் தேதி தைபேய் விமான நிலையத்திலோ, அதன் அருகிலோ எந்த விமான விபத்தும் நடக்கவில்லை என்று தைவான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜப்பான் கோவில் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள சாம்பல் மற்றும் எலும்புகளை டி என் ஏ பரிசோதனை நடத்த விடாமல் தடுத்து விட்டது இந்திய அரசு.

முகர்ஜி கமிஷன் தாக்கல் செய்த அறிக்கையில் நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்று அளித்த அறிக்கையை எவ்வித காரணமும் கூறாமல் இந்திய அரசு நிராகரித்து விட்டது.

பல முக்கிய ஆவணங்கள் காணாமல் போய் விட்டதாக முகர்ஜி கமிஷன் சுட்டிக் காட்டியிருந்தது.

பிரிட்டனில் 25.10.1945ஆம் நாள் பிரதமர் கிளமண்ட அட்லீ தலைமையில் நடந்த காபினட் கூட்டம் வரலாற்றில் மிக முக்கியதுவம் வாய்ந்த நிகழ்வு.

அந்தக் கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. பிரிட்டிஷ் அரசே பதிப்பித்த ஆட்சி மாற்றம் என்ற நூலில் இந்தியாவில் ஒரே எதிரியாகப் போஸ் வருணிக்கப்பட்டார். அவரைக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வந்து என்ன தண்டனை அளிப்பது என அமைச்சரவை விவாதித்துள்ளது.

ஆக போஸ் இறந்து விட்டது உண்மையாக இருக்குமானால் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட இரண்டு மாதம் கழித்து பிரிட்டிஷ் அரசின் அமைச்சரவை போஸைக் கைது செய்வது பற்றி எப்படி விவாதித்திருக்க முடியும்?

பிரிட்டிஷ் – இந்திய அரசு பிரிட்டனில் உள்ள அரசுக்கு 23.10.1945 ஆம் நாள் அனுப்பிய கடிதத்தில் போஸைக் கைது செய்தால் நாடே கொந்தளிக்கும் “அவர் எங்கிருக்கிறாரோ அங்கேயே இருக்கட்டும்.அவரை சரண் அடைய வற்புறுத்தாதீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தது.

நேதாஜியுடன் பயணம் செய்து உயிரிழந்ததாக கூறப்பட்ட கிமுரா என்ற ராணுவ தளபதி ஒரு மாதம் கழித்து சிங்கப்பூரில் சரணாகதி பத்திரத்தில் கையெழுத்து இட்டவர், உயிரிழந்ததாக கூறப்பட்டவர் எப்படி வந்தாரோ அதே போல தான் நேதாஜியின் மரண செய்தியும்.

1946 மார்ச் லாகூரில் உள்ள ட்ரிபியூன் என்ற பத்திரிகையில் சிங்கப்பூர் வீழ்ச்சியின் போது நகரசபை இன்ஜினியராக இருந்த திரு நாயர் கூறிய செய்தியை வெளியிட்டு இருந்தது அதில் "நேதாஜி சென்ற விமானம் மறுநாள் ஹாங்காங்கில் எவ்வித சேதமும் இல்லாமல் இருந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.

1946 ல் ஷா நவாஸ் கான் மற்றும் சைகாலும் திரு காந்தி அவர்களுடன் பேசிக் கொண்டு இருந்த போது நீங்கள் நேதாஜி பற்றி எத்தகைய செய்திகளை கூறினாலும் நேதாஜி இறக்கவில்லை என்பது தான் எனது தீர்மானம் என்று கூறியிருந்தார்.

ஷா நவாஸ் கான் விசாரணையை ஏற்க முடியாது என்றும் ஷா நவாஸ் கான் ஜப்பானை விட்டு வெளியேற வேண்டும் என்று ஜப்பான் இந்தியர்கள் போராட்டம் நடத்தி இருந்தனர், காரணம் ஷா நவாஸ் கான் கமிஷன் சுதந்திரமாக செயல்படாமல் நேருவின் கீழ் இயங்கியது, உண்மைகளை வெளியிடாமல் மறைக்க நினைத்தது அந்த கமிஷன்.

நேதாஜியின் மிக நெருங்கிய நண்பரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1949 ஜனவரி 23 ல் நடந்த நேதாஜி பிறந்த நாள் பொதுகூட்டத்தில் நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்றும் தனக்கும் நேதாஜிக்கும் தொடர்பு ஏற்பட்டு விட்டது என்றும் உறுதிபட தெரிவித்தார்.

1950 ல் இந்தியாவில் இருந்து தலைமறைவான தேவர் ஒராண்டு கழித்து மீண்டும் இந்தியாவிற்குள் நுழைந்தார், மீண்டும் 1951 ல் நடந்த நேதாஜி பிறந்த நாள் விழாவில் நேதாஜி நலமாக இருக்கிறார், அவரை சந்தித்து விட்டு வந்தேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் சில ஆண்டுகள் கழித்து பர்மா சென்று திரும்பும் வழியில் கொல்கத்தாவில் பத்திரிகையாளர்களை சந்தித்த தேவர் நேதாஜி உயிருடன் இருக்கிறார், நேதாஜி உயிருடன் இருப்பது நேரு மற்றும் அவரது சகோதரி ரஷ்ய தூதரான விஜயலட்சுமி பண்டிட் அவர்களுக்கும் தெரியும், தங்களது அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் மௌனம் காக்கின்றனர் என்றும் தெரிவித்திருந்தார் .

Friday, October 23, 2015

கிளியோபாட்ரா தற்கொலை செய்து கொண்டது எப்படி?


Print Friendly and PDF



எகிப்தியன் கோப்ரா என்ற பெயரால் அழைக்கப்படும் NAJA வகைப் பாம்பை தன் மார்பில் கடிக்க வைத்து கிளியோபாட்ரா இறந்துபோனாள்.இது புளுடார்ச் உள்ளிட்ட பல சரித்திர ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளது.இறந்து கிடக்கும் கிளியோபாட்ராவின் திறந்த மார்பில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதாகத்தான் பல பழைய ஓவியங்களும் அமைந்துள்ளன.ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட சிலர் கிளியோபாட்ரா மார்பில் ஒன்று கையில் ஒன்று என்ற இரண்டு பாம்புகளைக் கடிக்க விட்டு தற்கொலை செய்து கொண்டதாக எழுதியுள்ளனர்.ஆனால் எகிப்திய கோப்ரா வகை பாம்பு கடித்தால் விஷம் மெதுவாகத்தான் உடலில் பரவுமாம் .உடனடி மரணம் நிகழாதாம்.

கிளியோபாட்ரா விஷம் தடவப்பட்ட தங்க ஊசிகளை தன் மணிக்கட்டில் குத்திக் கொண்டு இறந்தாள் என்னும் கருத்தும் உண்டு.இறந்து கிடந்த கிளியோபாட்ராவின் உடலைச் சோதனையிட்ட அகஸ்டஸ் அவளது கையில் இரு மெல்லிய துளைகளைக் கண்டதாகவும் குறிப்புகள் உள்ளன.தன் உடல் அழகை போற்றி பாதுகாத்த கிளியோபாட்ரா பாம்பை கடிக்கவிட்டு உடலெங்கும் நீலமாகி கொடூரமாக வலியோடு இறந்துபோவதை விரும்பியிருக்க மாட்டால் அவள் ஹெம்லாக் என்ற தாவரத்தின் கொடூர விஷத்தை ஓபியத்தில் கலந்து சாப்பிட்டு இருக்கலாம்.அது உடணடி மரணத்தை தரக்கூடியது-என்பது.ஜெர்மனியை சார்ந்த Christoph schaefer என்ற சரித்திர ஆசிரியரின் கோணம்.

அலெக்ஸாண்டிரியாவில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து இறந்த கிளியோபாட்ராவின் கல்லறை எங்கே இருக்கிறது என்பது குறித்த மர்மமும் சீரஞ்சிவிாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

Tuesday, October 13, 2015

The Real Science Behind The Martian


Print Friendly and PDF

த மார்ஷியன். கிளாடியேட்டர், புரோமிதியஸ், ராபின் ஹூட், பிளாக் ஹாக் டவுன், ஹனிபல், எக்ஸோடஸ்: காட்ஸ் அண்ட் கிங்ஸ் என மறக்க முடியாத படங்களைத் தந்த இயக்குனர் ரிட்லி ஸ்காட்டின் படம் இது
பூமிக்கு மனித இனம் வந்தது எப்படி என்பதைத் தேடிச் செல்லும் படம் தான் புரோமிதியஸ். இதற்காக LV-223 என்ற கிரகத்துக்குச் செல்லும் விண்வெளி வீரர்களுக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சுகிறது.

மனித இனத்தை அழித்து ஒழிக்கும் அபாயம் அங்கே இருப்பதைக் கண்டு அதிர்கின்றனர்.

இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இது ஒரு அரைவேக்காடு என்ற விமர்சனத்தை பெற்றது அந்தப் படம்.


The Real Science Behind The Martian அந்த விமர்சனங்களை மொத்தமாக துடைத்து எறியும் படம் தான் மார்ஷியன். இதே பெயரில் வெளியான ஒரு நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் இது.

மனிதனின் பலமே புத்திசாலித்தனமும் விடா முயற்சியும் தான். இந்த இரண்டும் இருக்கும் வரை மனிதன் எந்த பிரச்சனையையும் சமாளிக்க முடியும், அது மார்ஸ் கிரகத்தில் தனித்து விடப்பட்டாலும் கூட என்பதை அழுத்தமாகவும் அறிவியல்பூர்வமாகவும் நம்பும்படியும் சொல்கிறது இந்தப் படம்.

செவ்வாய் எனப்படும் மார்ஸ் கிரகத்துக்கு மனிதன் பல பயணங்கள் மேற்கொண்டு அங்கே ஒரு ஆய்வகத்தையும் அமைத்துவிட்டநிலையில் தொடங்குகிறது படம்.

அந்த கிரகத்துக்கு செல்லும் புதிய குழு, பெரும் புயலில் சிக்க, உடனடியாக அவர்கள் அங்கிருந்து வெளியேறி பூமிக்குத்திரும்புகின்றனர். இவர்களும் 4 வருடம் பயணம் செய்தே பூமியை அடைய முடியும்.

இதில் மேட் டேமன் மட்டும் மார்ஸ் கிரகத்தில் தனித்து விடப்படுகிறார்.புயலில் சிக்கி அவர் இறந்துவிட்டதாக நினைத்து மற்றவர்கள் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருக்க, ஒரு வழியாக உயிர் பிழைத்து தனது ஆய்வகத்துக்குத்திரும்புகிறார்.மிஞ்சி இருப்பது இந்த ஆய்வகமும், ஒரு சிறிய ரோவரும் தான் (பேட்டரி கார்). பூமியிலிருந்து 55 மில்லியன் கி.மீ. தொலைவில், யாருமில்லா கிரகத்தில், புயலில் முழுமையாக சேதமடைந்துவிட்ட
ஆண்டனாக்களால் பூமியோடு தொலைத் தொடர்பு வசதி கூட இல்லாமல் மாட்டிக் கொண்டவர் என்ன செய்வார்.

தனது மரணத்தை எதிர்நோக்கி காத்திருப்பார்.இது தானே வழக்கம். ஆனால், நான் சாகக் கூடாது. எப்படியாவது உயிரோடு இருக்க வேண்டும், நான் உயிரோடு இருப்பதை நாஸாவுக்குத் தெரிவிக்க வேண்டும், அவர்கள் என்னை எப்படியும் மீட்டிச் செல்வார்கள் என்ற நம்பிக்கையோடு தனது புத்திசாலித்தனத்தையும் பிரச்சனைகளை எப்படி பாஸிட்டிவாக அணுகுவது என்ற திறமையையும் வைத்துக் கொண்டு அடுத்தடுத்த காட்சிகளில் அதகளம் செய்கிறார் மேட் டேமன்.

பூமியிலிருந்து உடனடியாக ஒரு விண்கலம் கிளம்பினால் கூட மார்ஸ் கிரகத்தை அடைய 4 ஆண்டுகள் ஆகும் என்பதால், தான் உயிரோடு இருக்க முதலில் நீரை தயாரிக்கவும் அடுத்ததாக ஆய்வக சூழ்நிலைக்கு உள்ளேயே உருளைக்கிழங்கையும் பயிரிடவும் திட்டம் போடுகிறார்.

ஆய்வு மையத்தில் இருக்கும் கருவிகள், ரசாயனங்களை வைத்தே நீரை உருவாக்குவதோடு, தன்னுடன் வந்த விண்வெளி வீரர்களின் கழிவுகளை செவ்வாய் கிரக மண்ணில் கலந்து உரமாக்கி உருளைக் கிழங்கை வெற்றிகரமாக பயிரிடுகிறார்.

அதிலும் ஒரு விபத்து ஏற்பட்டு பயிர்கள் காலியாகி விடுவதோடு, அடுத்தடுத்து தொடர் பிரச்சனைகள். தான் உயிரோடு இருக்க ஒரே வழி, பூமிக்கு நாம் உயிரோடு இருப்பதை தெரிவிப்பது தான் என்ற முடிவுக்கு வரும் மேட் டேமன், செவ்வாய் கிரத்தில் உண்மையிலேயே இறங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்ட Pathfinder விண்கலத்தைத் தேடி கிளம்புகிறார் (கதை எதிர்காலத்தில் நடப்பதால்,அந்த விண்கலம் காலாவதியாக. மண்ணில் புதைந்து கிடக்கிறது)

அதை ஒரு வழியாக தேடிப் பிடித்து பூமியோடு தகவல் பரிமாற்றம் செய்து உயிரோடு இருப்பதை சொல்கிறார். இதையடுத்து பூமியிலிருந்து உணவு, நீருடன் ஒரு விண்கலத்தை அவசரமாக அனுப்ப நாஸா எடுக்கும் முயற்சிகளும் தோற்றுவிட, அவர்களுக்கு சீனா தங்களது ரகசியமான அதிவேக ராக்கெட்டை தந்து கை கொடுக்கிறது. அதுவும் கூட செவ்வாய் கிரகத்தை அடைய 3 ஆண்டுகள் ஆகும் என்ற நிலையில், அடுத்ததாக இந்த கிரகத்துக்கு நாஸா அனுப்பப் போகும் விண்கலம் தரையிறங்கும் இடத்தை நோக்கி பேட்டரி காரில் பயணிக்கிறார்.

இதற்காக எக்ஸ்ட்ரா பேட்டரிகளை அவர் சேகரிப்பதும், குளிருக்காக ஹீட்டரை போட்டால் பேட்டரிகளின் பவர் வேகமாக காலியாகும் என்பதால் அதைத் தவிர்க்க அந்த காருக்குள், விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட புளுட்டோனியம் உலையை பயன்படுத்துவதும், நீர் தயாரிக்க புதிய வகையான தொழில்நுட்பத்தை உருவாக்குவதும் என படம் முழுக்கவே அழகழகான புத்திசாலித்தனமான ஹை டெக் அறிவியல் செய்திகள்.

இவரை மீட்க என்ன தான் செய்வது என நாஸாவின் மூத்த விஞ்ஞானிகள் எல்லாம் குழம்புகையில், ஒரு இளம்விஞ்ஞானி மேட் டேமனை மீட்க அட்டகாசமான ஐடியா தருகிறார்.

செவ்வாய் கிரகத்திலிருந்து கிளம்பி பூமியை நோக்கி திரும்பி வந்து கொண்டிருக்கும்விண்கலத்தை அப்படியே பூமியை ஒரு ரவுண்ட் அடிக்க வைத்து, பூமியின் சுற்று விசையையே விண்கலத்துக்கான உந்து சக்தியாக (sling shot) மாற்றி, அதை மீண்டும் செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணிக்க வைக்கலாம் என்கிறார். அதை வைத்து நாஸா எடுக்கும் கடைசி கட்ட முயற்சிகள், செவ்வாய் கிரகத்திலிருந்து மேட் டேமன் விடுபட்டு இந்த விண்கலத்துக்குள் நுழைய நாஸா தரும்யோசனைகள், இந்த மீட்புத் திட்டத்துக்கு மேட் டேமனும் தரும் கூடுதல் ஐடியாக்கள்... என நாஸா என்பது உலகின் டாப் மூளைகளின் சங்கமம் என்பதை மீண்டும் உணரவைக்கிறார்கள்.

இந்த மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பவராக ஒரு இந்திய நாஸா விஞ்ஞானியும் இருக்கிறார்.

கொஞ்சம் அதிபுத்திசாலித்தனமும் விடாத முயற்சியும் இருந்தால் மனிதன் எந்த சவாலையும் எதிர்கொள்ளலாம் என்பதை ஒரு சினிமாவாக சொல்லியிருக்கிறார் ரிட்லி ஸ்காட்.

அதற்கு செவ்வாய் கிரகத்தை களமாக பயன்படுத்தியிருக்கிறார். படத்தில் மூழ்கிவிடும் ரசிகரை கூட மீட்புப் பணிகள் தொடர்பாக ஐடியா தர வைத்து விடுவார்கள் போலிருக்கிறது.

அவ்வளவு தூரம் படத்தோடு ஒன்றிவிட செய்கிறார் ஸ்காட். இது மனிதனை கொண்டாடும் படம் / பாடம்.


தவறாமல், குழந்தைகளுக்கு இந்தப் படத்தை காட்டுங்கள்....

Friday, October 9, 2015

ஜோஜோ டீமன் (ZOZO)

Print Friendly and PDF


நீங்க உண்மையாகவே ஓஜா போர்டை பயன்படுத்த போகிறீர்கள் என்றால்ஓஜா போர்டின் மூலம் உங்களை துன்புறுத்தும் துஷ்ட சக்தியான "ZOZO" பற்றிகண்டிப்பாக தொிந்திருக்க வேண்டும்."ZOZO"வைப் பற்றி அறியாமல் நீங்கள் ஓஜா போா்டினை பயன்படுத்தினால் பொிய ஆபத்தை சந்திக்க நோிடும்.

யாா் இந்த"ZOZO"? அது என்ன செய்யும் என்பதை கீழே பாா்ப்போம்."ZOZO"என்பது அமானுஷ்ய ஆத்மாவாகும் (துா் ஆத்மா).நீங்கள் ஓஜா போர்டின் மூலம் ஆவிகளுடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்ததும் ஆவியின் பெயரை முதலில் கேட்பீர்கள். அது Z இல் இருந்து O என்று மாறி மாறிகுறித்தால் அது அந்த அமானுஷ்ய ஆத்மா"ZOZO"தான்.

மேலும் அதனிடம் கேள்விகள் கேட்காமல் உடனே Goodbye சொல்லி இணைப்பை துண்டித்துவிடுங்கள்.இந்த செய்தியை படிக்கும் நண்பர்கள் ஒரு சில நேரத்தில் இணைப்பின் பொழுது Z-O தானாகவே தம்மை அறியாமல் நகர்த்தியதும் உண்டு . அது நம் ஆழ்மனத்தின் விளையாட்டு .

சில நேரங்களில் நாம் குறிப்பிட்ட ஒரு ஆத்மாவுடன் தொடர்பு கொள்ள நினைக்கும் பொழுதும், அதாவது நம் நண்பா்அல்லது உறவினா் ஒருவாின் ஆத்மாவுடன் தொடா்பு கொள்ள நினைக்கும் பொழுது இந்த"ZOZO"அரக்கன் நாம் யாரிடம் பேச நினைக்கிறோமோ அவர்களை போல் அழகாக நடித்து நம்மை ஏமாற்றி விடும். 

ஒரு சில நேரத்தில் நாணயம் இடது வலதாக வேகமாக நகர்த்தும்.விளையாட்டு தனமாக இருப்பவர்களே இந்த ஆத்மாவின் தாக்குதலுக்கு அதிகம் ஆளாகின்றனர் .பொதுவாக"ZOZO"விற்கு பெண்கள் மீதே அதீத நாட்டம் உள்ளதாக தெரிகிறது. பலர் தங்களது"ZOZO"அனுபவத்தை பகிரும் பொழுது, அந்த துா்ஆத்மா தங்களிடம் தொடர்பு கொள்ளும் பெண்களை கவா்ந்து அவர்களை நரகத்திற்கு அழைத்து போவதாக குறிப்பிட்டு கூறுகின்றனர் . 

மேலும் தொடர்பின் பொழுது இந்த"ZOZO"அதிகமாக பெண்களையே தாக்குகிறது என சிலா் ஆராய்ந்து கூறியுள்ளனா் .இந்த ZOZO மிக சுலபமாக நம்மை ஆட்கொள்ள கூடியது . நமக்கு நெருக்கமானவர்களை தாக்கவும் செய்கிறது, ஒரு சில நேரத்தில் அவர்களது இயல்பு குணத்தையே மாற்றகூடியது. 

நம் வீட்டை கூட அமானுஷ்ய நிலைக்கு மாற்ற கூடியது இந்த ZOZO.எனவே முடித்த அளவு ஆவி உலகத்தை தகுந்த அனுபவசாலியின் உதவியுடன் தொடர்புகொள்வதே நல்லது . விளையாட்டிற்காக இதை எக்காரணத்தை கொண்டும் உபயோகப்படுத்தாதீா்கள், 

விளையாட நமக்கு எவ்வளவோ விளையாட்டுகள் இருக்கிறது. இந்த ஓஜா போர்டைப் பற்றி முழுமையாக அறியாமல் பயன்படுத்தாதீா்கள்.

Tuesday, October 6, 2015

இல்லுமினாட்டியும், இல்லுமினா ரொட்டியும்.

Print Friendly and PDF


இல்லுமினாட்டிகள் பற்றி நன்கு அறிந்தவர்கள் தனி ஒருவன் படம் பார்த்த பொழுது. மற்ற அனைவரை விட. அந்த படத்தின் இயக்குனரான மோகன் ராஜாவை. நிச்சயம் பாராட்டி இருப்பார்கள். Genarated Mediciens, Emotional Crimes என்னும் பெயரில் நடக்கும் Organaised Crimes. பத்திரிகைகளிலும், மீடியாக்களிலும் திரித்து கூறப்படும் செய்திகள், புதிய மருந்துகளை பரிசோதிக்க சேரி குழந்தைகளை சோதனை எலிகளாக. பயன்படுத்தும் கொடுமை. என்று பல விசயங்களை சொல்லியிருக்கிறார். சுருங்க சொல்லின். இது ஒரு படம் அல்ல. மிகுந்த சுவாரஸ்யமான. உலக அரசியலை பற்றி இவர் சொல்லியுள்ள பாடம்.
அதுவும். தனி ஒருவன் படத்தில். சித்தார்த் அபிமன்யு என்னும் கதாபாத்திரம் மூலம். இல்லுமினாட்டிகளை பற்றி தான் மோகன் ராஜா சொல்லியிருக்கிறார். அது தான் என்னை போல் இல்லுமனாட்டிகள் பற்றி ஓரளவு அறிந்தவர்களை ஆச்சர்யப்படுத்தியது.
தனி ஒருவனை விட. அதிகமாக சில படங்களுக்கு விளம்பரத்திர்க்கான செலவுகள் செய்த பொழுது. இந்த படத்தின் தயாரிப்பாளரான. Ags நிறுவனர் கல்பாத்தி அகோரம் அவர்களுக்கு மட்டும். இவர் தயாரிப்பாளர் சங்க விதிமுறைகளையும் மீறி. தனது படத்திற்க்கு அதிக விளம்பரம் செய்து விட்டார். அதனால் இனிமேல். எந்த ஒரு படத்தையுமே இவர் தயாரிக்க கூடாது. அதுவும் அவர் வாழ்நாள் முழுவதும் தயாரிக்க கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் ஏன் அவருக்கு ரெட் கார்ட் போட வேண்டும். உங்களுக்கே புரிந்து இருக்கும். உலக அரசியல் இல்லுமினாட்டி. அடுத்து ஜெயம் ரவி, மோகன் ராஜா இருவருக்கும் பிரச்சனைகள் எந்த ரூபத்தில், விதத்தில் வரும் என்று தெரியவில்லை. தனி ஒருவன் டீமே. இனி மிகுந்த விழிப்போடு இருக்க வேண்டும்.
சரி. இல்லுமினாட்டிகள் என்றால் என்ன பொருள் என்று பார்ப்போம்.

Dan Browns இவர்களை பற்றி ஆங்கிலத்தில் எழுதிய Angels and Demons என்னும் நாவல். இவருடைய நாவல் தான். இல்லுமினாட்டிகள் குறித்து பலர் கண், காது, மூக்கு வெய்த்து கதை செய்வதற்கு அடிப்படையாக இருந்தது. பலர். இல்லுமினாட்டிகள் குறித்து வீடியோக்கள் நெட்டில் போட்டு இருக்கிறார்கள். அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒன்று என்றால். Rothchild குடும்பம். இல்லுமினாட்டி குடும்பத்தில் ஒரு அங்கம். Rothchild குடும்பத்தை சேர்ந்த ஒருவர். தனது இனத்தார் செய்யும் அராஜகம் பொறுக்காமல். திருந்தியது மட்டும் அல்லாமல். அதுவரை.இல்லுமினாட்டிகள் பற்றி ரகசியமாக இருந்த அணைத்து விசயங்களையும் யூ டியூப்பில் பட்டு என்று போட்டு உடைத்து விட்டார்.
இல்லுமினாட்டிகள் என்றால் ஞானம் அடைந்தவர்கள். தவம் இருந்து வரம் வாங்கி வந்தவர்கள். இது பொதுவாக பலரால் ஒப்புகொள்ளப்பட்ட ஒரு அர்த்தம். இதை தவிர்த்து. இல்லுமினாட்டி என்னும் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு.
இல்லுமினாட்டிங்கிறதை இல்லுமினாட் (illuminat) அப்படின்னுகூட சொல்லுவாங்க.... இதுக்கு ஆங்கிலத்துல சரியான வார்த்தை வராது... ஆனால் அமெரிக்க பழங்குடி மொழியான நோவாவுல இதோட அர்த்தம் பிரமையில இருப்பது (ஆதீதமான கற்பனையில் இருப்பது).... இரஷ்ய மொழியிலதான் இதுக்கு சரியான அர்த்தம் இருக்குன்னு சொல்லி அதுக்கு நம்ப வைத்தல்னு அர்த்தம் இருப்பதாகவும் சொல்லுவாங்க. இதுபோலவே இது ஜப்பானிய நிஞ்சா படையில் பயன்படுத்தப்பட்ட shadow அப்படிங்கிறதோட இல்லாத ஒன்று அப்படிங்கிறதுதான் இந்த இல்லுமினாட் அப்படின்னும் சொல்லுவாங்க. பிரிட்டிஷ் இங்க்லிஷ்ல இருக்கக்கூடிய இல்லூஸன், நேச்சர் அப்படிங்கிற வார்த்தைகளோட இணைப்புதான் இந்த இல்லுமினாட் அப்படின்னும் சொல்லுவாங்க.
ஒரு நண்பர் இந்த இல்லுமினாட்டிகள் பற்றி என்னிடம் நகைச்சுவையாக ஒன்றை சொன்னார்.
எங்க ஊர்ல இல்லுமினா ரொட்டின்னு லோக்கல் பிராண்ட் பிஸ்கட்டுக்கு பேரே இருந்திச்சு. அவ்வளவு பிரபலம் இந்த பேரு. கிராம வட்டம்ங்கிறதால இல்லுமினாட்டியை இல்லுமினா ரெட்டின்னு ஆக்கி. அவன் செல்வாக்கு படைத்த ஆந்திராக்காரன் அப்படின்னெல்லாம் ஊருக்குள்ள பேச்சு ஓடுச்சு. அதுவும் எப்படின்னா, சாய்பாபா மடத்துல இருந்து, திருப்பதியிலயிருந்து அணைக்கட்டு, அரசாங்கம்னு எல்லா இடத்துலயும் இப்போ அவன் ராச்சியம்தானாம்னு கதை ஓடும். அவன் கிராமத்தான். பக்கத்துல இருக்கிற ஆந்திராவுல ஆளைபிடிச்சு கண்ணு, காது, மூக்கெல்லாம் வச்சான். நீங்க படிப்பு வாசனை உள்ளவர். அதனால நாடுவிட்டு நாடுபோய் பிரான்ஸ்ல லொகேஷன் பிடிச்சு நாட்டுக்கு சண்டை போடுற அளவுக்கு இல்லுமினாட்டியை பில்ட்-அப் பண்ணிவிட்டு நம்புறீங்க.....
இல்லுமினாட்டிங்கிறவன் ஆந்திராக்காரன்.... ஆந்திராவுல இருக்கிற எல்லாமே அவன் கட்டுப்பாட்டுலதான்னு சொன்னா உங்களுக்கு அது எவ்வளவு காமெடியா இருக்கும்... இதை அப்படியே மேலே நான் சொன்ன இல்லுமினாட் அப்படிங்குறதோட பெயர் காரணத்துல பொருத்தி படிச்சுப்பாருங்க. எங்க கிராமம் 20வருசத்துக்கு முன்னாடி நம்பின விசயத்தோட அப்டேட் கான்சப்ட்டைதான் நீங்க இப்போ நம்புறீங்க...அவ்வளவுதான்.
ஒரே சொல்லுக்கு. பல பொருள்கள் அதே மொழியிலும் உண்டு. வேறு மொழிகளிலும் உண்டு. தமிழில் பேக்கு என்றால். அது திட்டும் வார்த்தை. கன்னடத்தில் பேக்கா. என்றால் வேண்டுமா என்று பொருள். கோ என்னும் சமிஸ்கிருத சொல்லுக்கு. மன்னன், மக்கள், பசு என்று மூன்று வித அர்த்தங்கள் உண்டு. வேறு மொழிகளுக்கு ஏன் போக வேண்டும். அடி என்கிற ஒரு வார்த்தையை எடுத்து கொள்வோம். அவனை ஓங்கி அடி, திருக்குறள் இரண்டு அடி, இறைவனின் மலர் அடி. இறைவனின் அடி. [கால்] உதவுவது போல் அண்ணன், தம்பி கூட உதவ மாட்டான் என்னும் ஆன்மீக பழமொழி தான். பின்னாளில் வன்முறையை தூண்டும் பழமொழியாக திரித்து சொல்லப்பட்டது. சரி இந்த பழமொழி ஆராய்ச்சியெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். இப்டி ஓராயிரம் உதாரணங்களை சொல்லலாம்.
இல்லுமினா ரெட்டி கற்ப்பனை என்பதால். இல்லுமினாட்டிகளும் கற்ப்பனை என்று ஆகி விடாது. இல்லுமினா ரெட்டி, இல்லுமினாட்டி. இரண்டு வார்த்தைகளுக்கும் பெயர் ஒற்றுமைகள் இருப்பதை மட்டும் வெய்த்து. அதோட அப்டேட் கான்சப்ட் தான் இது. என்று சொன்னால், அது சிறந்த நகைச்சுவை. முதலில் இல்லுமினாட்டிகள் பற்றி பல உண்மைகளை எழுதிய Dan Brown க்கு. கிராமத்து மக்களுடைய இல்லுமினா ரெட்டி கதை பற்றி சத்தியமாக தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. இதுபோல் இலுமினாட்டிகள் பற்றிய உண்மைகளை இந்த உலகிற்கு சொல்லும் அனைவருமே மெத்த படித்தவர்கள்.
முதலில் இல்லுமினா ரெட்டி என்னும் கற்ப்பனை கான்செப்ட் 20, 30 ஆண்டுகளுக்கு முன் சில கிராம மக்கள். அவர்களின் அறியாமையால் நம்பிய விஷயம். ஆனால். நூரு ஆண்டுகளுக்கும் மேல். இல்லுமினாட்டிகள் பற்றி பலர் சொல்லி கொண்டு இருக்கிறார்கள். இப்பொழுது Facebook, Twitter, Whatsapp, Youtube போன்ற சோசியல் மீடியாக்களின் மூலம். இல்லுமினாட்டிகள் பற்றிய பல உண்மைகள் பல லக்சம் மக்களுக்கு வேகமாக பரவி கொண்டு இருக்கிறது. உண்மைகளோடு சில பொய்களும் வேகமாக பரவுகிறது. உதாரனத்திற்க்கு.
Youtubeபில் எந்த வீடியோ வர வேண்டும், Google ளில் என்ன, என்ன விசயங்கள் வர வேண்டும், தொலைக்காட்சி, பத்திரிகைகளில் என்ன, என்ன செய்திகள் வர வேண்டும். Facebook ல என்ன, என்ன மாதிரி ஸ்டேட்டஸ் வர வேண்டும். அதாவது நான் முகனூலில் என்ன பதிவு போட வேண்டும் என்பதை கூட தீர்மானிப்பது இல்லுமினாட்டிகள் தானாம். இதை படிக்கும் பொழுது உங்களுக்கு சிரிப்பு வரலை. ஆனால்? இந்த மாதிரி சிலர் செய்யும் காமெடியை கூட உண்மை என்று நம்பவும் ஒரு கூட்டம் இருக்கு.
சரி. அப்படியென்றால். இந்த இல்லுமினாட்டிகள் என்பவர்கள் யார்? இதுவரை. நான் செய்த பதிவு உட்பட. இல் லுமினாட்டிகளை பற்றிய எந்த பதிவுகளையும், புத்தகங்களையும் படிக்காதவர்கள், இல்லுமினாட்டி வீடியோக்களை பார்க்காதவர்கள். இல்லுமினாட்டி என்னும் சொல்லையே இதுவரை கேள்வி படாதவர்கள் கூட எனது இந்த பதிவை படித்து கொண்டு இருக்கலாம். அவர்களுக்கும், அனைவருக்கும் புரியும்படி எளிமையாக சொல்வது என்றால்.
உலகில் பல மதங்கள் உண்டு. அதில் இல்லுமினாட்டி மதமும் ஒன்று. சாத்தானுக்கு என்றே சர்ச் கட்டி. சர்ச் ஆப் சாத்தான் என்னும் பெயரில் இவர்கள் நரபலியிட்டு, ரத்த படையல் போட்டு வழிபாடு செய்கிறார்கள். சர்ச் ஆப் சாத்தான் உலகின் பல பகுதிகளில் உண்டு. சென்னை உட்பட. உங்களுக்கு சந்தேகமாக இருந்தால். Google ளில் Church Of Sathan In Chennai என்று டைப் செய்து பாருங்கள்.