எகிப்தியன் கோப்ரா என்ற பெயரால் அழைக்கப்படும் NAJA வகைப் பாம்பை தன் மார்பில் கடிக்க வைத்து கிளியோபாட்ரா இறந்துபோனாள்.இது புளுடார்ச் உள்ளிட்ட பல சரித்திர ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளது.இறந்து கிடக்கும் கிளியோபாட்ராவின் திறந்த மார்பில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதாகத்தான் பல பழைய ஓவியங்களும் அமைந்துள்ளன.ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட சிலர் கிளியோபாட்ரா மார்பில் ஒன்று கையில் ஒன்று என்ற இரண்டு பாம்புகளைக் கடிக்க விட்டு தற்கொலை செய்து கொண்டதாக எழுதியுள்ளனர்.ஆனால் எகிப்திய கோப்ரா வகை பாம்பு கடித்தால் விஷம் மெதுவாகத்தான் உடலில் பரவுமாம் .உடனடி மரணம் நிகழாதாம்.
கிளியோபாட்ரா விஷம் தடவப்பட்ட தங்க ஊசிகளை தன் மணிக்கட்டில் குத்திக் கொண்டு இறந்தாள் என்னும் கருத்தும் உண்டு.இறந்து கிடந்த கிளியோபாட்ராவின் உடலைச் சோதனையிட்ட அகஸ்டஸ் அவளது கையில் இரு மெல்லிய துளைகளைக் கண்டதாகவும் குறிப்புகள் உள்ளன.தன் உடல் அழகை போற்றி பாதுகாத்த கிளியோபாட்ரா பாம்பை கடிக்கவிட்டு உடலெங்கும் நீலமாகி கொடூரமாக வலியோடு இறந்துபோவதை விரும்பியிருக்க மாட்டால் அவள் ஹெம்லாக் என்ற தாவரத்தின் கொடூர விஷத்தை ஓபியத்தில் கலந்து சாப்பிட்டு இருக்கலாம்.அது உடணடி மரணத்தை தரக்கூடியது-என்பது.ஜெர்மனி
அலெக்ஸாண்டிரியாவில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து இறந்த கிளியோபாட்ராவின் கல்லறை எங்கே இருக்கிறது என்பது குறித்த மர்மமும் சீரஞ்சிவிாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.