My Twitter Favorites


பயணங்கள் எப்பொழுதுமே மனிதனை மேம்படுத்துகின்றன ; அவனை உளவியல் ரீதியாக மாற்றுகின்றன...

Wednesday, October 1, 2014

Ghost story :

இது 2002 இல் நண்பனின் அண்ணனிற்கு நடந்த நிகழ்வு. அவர் பெயர் அகஸ்டின் .. தமிழ்நாடு , கேரளாவிற்கு இடைப்பட்ட எல்லையில் உள்ள பொறியியல் கல்லூரியில் 2 அம் ஆண்டு விடுதியில் தங்கி பயிலும் பொது ஏற்பட்ட திகில் அனுபவம் ..
அவர்கள் வழக்கமாக சனி இரவு அருகில் உள்ள டவுன் பகுதியில்உள்ள திரை அரங்கில் இரண்டாம் காட்சி படத்துக்கு சென்று வருவது வழக்கமாம் .. படம் முடிந்து அந்த இரண்டு கி.மீ தூரத்தை நடந்தே வந்து விடுதி செருவதில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியாம். வரும் வழியில் பார்த்த திரை படத்தினை பற்றிய விவாதங்களுடன் தொடருமாம் பயணம் ..
அந்த வருகின்ற பாதையானது மண் பாதை தானாம் .. இரண்டு புறமும் செடி புதர்குலடன் கூடியதாம் அந்த பாதை.

அன்றும் அப்படி தான் ஒரு திரைப்படத்தினை பார்த்து விட்டு அரட்டைகளுடன் நடந்து வந்துள்ளனர் .. அபொழுது மணி இரவு 2.30 . அதே நேரம் அவர்களின் பின்னால் ஒரு 65,70வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் வந்துள்ளார் .. அவரை பார்த்த மாத்திரத்தில் தெரிந்ததம் அவர் கேரளவினை பூர்விகமாக கொன்றவர் என்பது .. அவரது ஆடையும் அதை உறுதி படுத்தியதாம் .. கையில் ஒரு நடை கோல் உடன் இருந்த அவர் நடையில் கோலின் சத்தம் அதிகமாகவே கேட்டதாம். அந்த அமானுஷ்ய அமைதியில் அவரது அந்த நடை குச்சியின் சப்தம் அதிகமாகவே கேட்டுள்ளது ..
அதை கண்ட என் நண்பனின் அண்ணன் மற்றும் அவர்களின் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு கேள்வி மனதில் எழுந்துள்ளது.
காரணம் ஆளே இலாத மற்றும் அப்பாதையில் கலூரியை அடுத்து வீடோ , ஏன் கலூரி தவிர்த்து கட்டிடம் காண கூட கல்லூரி தாண்டி 3,4 கி.மீ செல்லவெண்டுமம். அப்படி இருக்கையில் இந்த முதியவர் அதுவும் இந்த நேரத்தில் இங்கு நடந்து செல்ல என காரணமாக இருக்கும் என சந்தேகம்.
அதனை ஒருவருக்கு ஒருவர் கேட்டுகொண்டு இருகயிலையே அவர் இவர்களை அழைத்து இருக்குறார் இவர்களை பற்றிய விபரங்களை கேட்டிருகிறார். கல்லூரி பெயரை தவிர அனைத்து விபரங்களையும் பொய்யாகவே சொலி இருக்கிறார்கள் என் நண்பனின் அண்ணனும் அவரின் நண்பர்களும். விபரங்களை கேட்டு விட்டு மணி என்ன எனவும் கேட்டுள்ளர் இவர்கள் மணியினை சொல்ல அவர் சரி என விடைபெற்றுளார்.

இவர்கள் இணை புரியாத அமனுஷ்ய பயத்துடன் நடையின் வேகத்தை கூட்டி நடந்து இருகிறார்கள். 5 அடி தூரம் நடந்து இருபார்கலாம். நண்பரில் ஒருவன் டேய் என அலறி இருக்கிறார். அனைவரும் ஒரு நொடி தூக்கி வாரி போட்டவர்கலாய் திரும்பி பார்க்க. அந்த முதியவர் வந்ததற்கான சுவடே இல்லையாம். அந்த 5 அடி இடைவெளியில் அவர் எங்கும் ஓடி மறைய வாய்ப்பே இல்லை. காரணம் அந்த இடைவெளியில் இருபது. ஒரே ஒரு மரம் மட்டும் தான் மேலும் அந்த இடைவெளியில் உள்ள சாலையின் இடது புரம் சமான பூமி. அவர்களின் பயத்திற்கு எல்லை இல்லாத அந்த தருணம். அவர்களில் ஒருவர் மட்டும் அந்த மரத்திற்கு அருகில் சென்று பார்க்க. 3 ஆணி அடிக்க படிருந்ததை பார்த்திருக்கிறார்.மேலும் மரத்தின் பின் புறம் சிலுவை செருகிய ஒரு மண் குவியல் கட்டாயம் அது ஒருவரின் உடல் புதைக்கப்பட்ட இடம் ... அதற்கு மேல் அவர்கள் அங்கு நேரத்தை செலவுட விரும்பவில்லை விடுதியை நோக்கி 1.5 கி.மீ ஓடியே அடைந்து உள்ளனர் .. அன்று இரவு தூக்கம் எவளவு முயன்றும் வர விஇல்லையாம். அடுத்த நாள் காலை அந்த இடுகாட்டிற்கு சொந்தமுள்ள ஊரினிற்கு சென்று விசாரித்துள்ளனர். அவர்கள் இரவு நடந்து வந்தோம் என்று ஆரம்பிக்கும் போதே எவரும் மணி கேட்டனர என அவர்கள் விசாரிக்க துவங்கி விட்டனராம். அவர்கள் திகிலின் உச்சத்திற்கே சென்று விட்டனராம். இது போல் பல முறை அப்பாதையில் பயணிக்கும் நபர்களுக்கு நடதுள்ளதாகவும். மேலும் அவர் அச்சாலையில் விபத்தில் இறந்த ஊரு காரர் என்றும் கூரினர்கலாம். அவர் இறந்த பிறகு அவரின் ஒரே மகன் வெளி ஊருக்கு சென்று விட்டார் என்றும் கூறி உள்ளனர். மிகவும் திகிலான அந்த அனுபவம் இன்று வரை அவர்களுக்கு நினைவில் இருந்து அகலவில்லயாம். அனால் அவரின் முகம் யாருக்கும் சரியாய் நினைவில்லயாம். இதை நண்பர்களிடத்தில் கூற எவரும் நண்பவில்லியாம். மேலும் சில நண்பர்கள் அந்த அனுபவத்தினை பெற அதே போல் அதே நேரம் அங்கு பயணித்தும் உள்ளனர். அனால் அபொழுது எல்லாம் எந்த நபரும் அங்கே இருக்கவில்லையாம் ..

அறிவியல் வளர்ந்த இந்நாட்களில் விடை தெரிய அமானுஷ்யங்கள் உலகத்தின் பல முலைகளில் அரங்கேறி கொண்டு தான் உள்ளது ..

( எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும் .. 
)